மேலும் அறிய

மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகையை ஆய்வு செய்த வனத்துறையினர்

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் யானையை அபயாம்பிகையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை இன்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா ஐ.எப்.எஸ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், யானைகள் ஆராய்ச்சி மாவட்டக்குழு உறுப்பினர் சிவகணேஷ், வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். 



மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகையை ஆய்வு செய்த வனத்துறையினர்

ஆய்வின் போது யானையின் கண், தோல், பாதம், யானையின் வெளிப்புறத் தோற்றம் ஆகியவற்றை கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் யானையை நடக்க வைத்து பரிசோதித்த அதிகாரிகள், யானைக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி யானைப்பாகன் செந்திலிடம் கேட்டறிந்தனர். அப்போது, கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.


மயிலாடுதுறையில் நகராட்சிக்கு சொத்து வரி, காலி மனை வரி உள்ளிட்ட வரிகளை அதிக அளவில் நிலுவையில் வைத்துள்ளவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.  இந்த நகராட்சியின் சொத்து வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல்வேறு இனங்களில் மொத்தம் 8  கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனால் பாதாள சாக்கடை சீரமைப்பு, சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு நகராட்சியில் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சிக்கு சொத்து வரி, காலிமனை வரி உள்ளிட்ட வரிகளை அதிக அளவில் நிலுவையில் வைத்துள்ளவர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 


மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகையை ஆய்வு செய்த வனத்துறையினர்

நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த நகராட்சி அதிகாரிகள் நிலுவையின்றி வரிகளை செலுத்த அறிவுறுத்தினர்.


தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் பயிலும் 760 மாணவ மாணவிகளுக்கு புதுவருட பிறப்பை அடுத்து நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சியை தருமபுரம் ஆதீனம் துவக்கி வைத்தார். 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த ஆதீன சைவ திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி ஆதீன வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் 760 மாணவ மாணவிகளுக்கு 2023 -ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சி ஆதீன மடத்தில் நடைபெற்றது. மாணவ மாணவிகளுக்கு நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சியை தருமபுரம் 27 -வது குரு மகா சன்னிதானம்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் துவக்கி வைத்தார்.


மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகையை ஆய்வு செய்த வனத்துறையினர்

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நாள்காட்டிகள் வழங்கப்பட்டன. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மயிலாடுதுறையில் அமைந்துள்ள புகழ்பெற்ற குமரக்கட்டளை வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற மார்ச் 24 ம் தேதி (24.03.2023) அன்று நடைபெறும் என்றும், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
Embed widget