மேலும் அறிய

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறை அருகே 15 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்ததை கண்டித்து விவசாயிகள் நெல்லினை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்கள் சுமார் 1.40 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உரிய நேரத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் விவசாயிகள்  அவதியுற்று வந்தனர். 


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

மேலும் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க வலியுறுத்தி அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர். அதன் விளைவாக விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. 

Union Budget 2022: ‛மாநிலங்களுக்கு உதவ ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு...’ -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அப்பகுதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில் அங்கு செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடலங்குடி கிராமத்திற்கு திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. 


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பழைய இடத்திலேயே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று மயிலாடுதுறையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் திருவேள்விக்குடி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

நெல்லினை சாலையில் கொட்டி   மறியல் செய்த விவசாயிகள் பழைய இடத்திலேயே கொள்முதல் நிலையத்தை அமைத்து தரக்கோரி முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த குத்தாலம் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பழைய இடத்திலேயே அரசு நேரடி நெல் கொள்முதல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை விவசாயிகள் தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Budget 2022 Public Reaction: ‛விலைவாசி ஏறுது... வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யாம இருந்தா என்ன பண்ணுவோம்’ -இது தமிழ்நாட்டு மக்களின் குரல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !
திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம்... 'டீ' வியாபாரியை வழிமறித்து வெட்டி படுகொலை...
திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம்... 'டீ' வியாபாரியை வழிமறித்து வெட்டி படுகொலை...
Embed widget