மேலும் அறிய

வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

வெள்ள காலங்களில் தண்ணீரில் சிக்குபவர்களை மீட்பது குறித்து காவல்துறைக்கு  கமாண்டோ படை சார்பில் நேரடி பயிற்சி மயிலாடுதுறையில் வழங்கப்பட்டது.

ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கடற்கரையோர மாவட்டங்கள் புயல், கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் கடைசியாக பிரிக்கப்பட்ட மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டமும் கடலோர மாவட்டம் என்பதால் அதிகளவு புயல், வெள்ள பாதிப்புகளை சந்தித்து வரும் மாவட்டமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ள காலங்களில் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சென்னை அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை புரிந்து மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.


வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

அவ்வாறு வரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் காவல் துறையினரும் மீட்பு பணிகளில் பணியாற்றுவர். இந்த சூழலில் உள்ளூர் காவல் துறையினருக்கு மழை, வெள்ளம், புயல் இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து போதிய பயிற்சி அளிக்க காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை  தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள்  காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 


வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பெண் காவலர்கள் உட்பட 60 பேருக்கு 5 நாள் பயிற்சி முகாம் கடந்த 2 ஆம் தேதி துவங்கியது. செயல்முறை மற்றும் கற்பித்தல் வழியில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் சென்னையில் இருந்து வந்துள்ள கமாண்டோ படை காவல்துறையினர் 4 பேர் பங்கேற்று பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து 4ஆம் நாளான  இன்று மயிலாடுதுறை ஆழ்வார் குளத்தில் அதிநவீன மோட்டார் பொருத்தப்பட்ட ரப்பர் படகு மூலம் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவர்களை கயிறு மற்றும் உயிர்காக்கும் கருவிகள் கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் காவல்துறை சேர்ந்தவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதும் அவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் கமாண்டோ படை வீரர்கள் தத்துரூபமாக செய்து காட்டினர்.


வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு தெரிந்து கொண்டனர். இது போன்ற பேரிடர் காலங்களில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை மிக்க, பேரிடர் மீட்புப் படையினர் வரும் வரை எதிர்பார்க்காமல் உள்ளூர் காவல் துறையினரே இறங்கி மீட்புப் பணியில் ஈடுபடும் வகையில் இந்த பயிற்சி அமைந்துள்ளது என்றும், மேலும் இந்தப் பயிற்சி என விரிவுபடுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறையினருக்கும் பொதுவாக அளிக்கப்பட வேண்டும் எனவும், காவல்துறையினருக்கு மற்றுமின்றி ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள தன்னார்வலர்களும் இப் பயிற்சியினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget