மேலும் அறிய

விபத்து போல் சித்தரித்து இளம்பெண் படுகொலை; 4 பேர் கைது

50 நாட்களுக்கு முன் ஜெயபாரதி விவகாரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்னையால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனக்கு வேலை போய்விடும் எனவும், உடனடியாக நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும் என விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயபாரதியையும், அவரது பெற்றோரையும் போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது.

திருவாரூர் அடுத்த கடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர்  சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதிக்கும், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். மணமக்கள் இருவரும் திருமண ஆன சில மாதங்களில் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவிற்கு சென்று விட்டனர். அங்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தற்போது நான்கு வயதாகிறது.

இதனிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் ஜெயபாரதியையும், குழந்தையையும் திருவாரூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கே விஷ்ணு பிரகாஷ் அனுப்பிவிட்டார். பலமுறை தனது பெண்ணை கணவனுடன் சேர்த்து வைக்க ஜெயபாரதியின் பெற்றோர் முயற்சித்தும்  பலனில்லாததால் கும்பகோணம் மகளிர் காவல்நிலையத்திலும், முதலமைச்சர் தனி பிரிவுக்கும், சமூக நலத்துறைக்கும் ஜெயபாரதி தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதற்கும் பலனில்லாததால் 50 நாட்களுக்கு முன் விவகாரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷ்க்கு ஜெயபாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்னையால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனக்கு வேலை போய்விடும் எனவும், உடனடியாக நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும் என விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயபாரதியையும், அவரது பெற்றோரையும் போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது.


விபத்து போல் சித்தரித்து இளம்பெண் படுகொலை; 4 பேர் கைது

இதனிடையே ஜெயபாரதிக்கு தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை கிடைக்கவே தப்பளாம்புலியூர் கிராமத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஜெயபாரதி பணி முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வரும் போது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்தில் உயிரிழந்து கிடப்பதாக ஜெயபாரதியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

உடனடியாக திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வாகன  விபத்தில் ஜெயபாரதி இறந்து விட்டதாக வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே ஜெயபாரதியின் விபத்து சாவில் மர்மம் இருப்பதாகவும், இது விபத்தில்லை எனவும் திட்டமிட்டு வாகனத்தை வைத்து ஜெயபாரதி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய விசாரணை நடத்தவேண்டும் என பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

வாகனம் திருவாரூர் அடுத்த பவித்திமாணிக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமானதாகவும், அதை இருதினங்களுக்கு முன்பு கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த ராஜா என்பவர் வாங்கி சென்றதாகவும் தெரிகிறது. 

மேலும் அன்று காலை ஜெயபாரதி வேலைக்கு செல்லும் பொழுது விபத்து ஏற்படுத்திய வாகனம் அவரை பின் தொடர்ந்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரங்களை வைத்து திட்டமிட்டு ஜெயபாரதியை கொலை செய்துள்ளாக போலீசரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் வாகனத்தை விற்பதற்கு உதவியாக இருந்த ஜெகனை பிடித்து விசாரித்ததில் ஜெயபாரதியை வாகனத்தை விட்டு மோத சொன்னதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். 

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் விபத்து வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஜெகன் அளித்த தகவலின் பேரில் நான்கு சக்கர வாகனத்தின் உரிமையாளரான பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், வாகனத்தை ஓட்டிவந்த கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த பிரசன்னா, உதவியாக இருந்த ராஜா ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் ஜெயபாரதியின் கணவரின் உறவினர்கள் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து போல சித்தரித்து இளம்பெண்ணை திட்டமிட்டு படுகொலை செய்த சம்பவம், திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

மக்களே உஷாரு... தஞ்சையில் இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்காம்
மக்களே உஷாரு... தஞ்சையில் இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்காம்
புதிய பொலிவுடன் காஞ்சிபுரத்தில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரமாண்ட மறுதிறப்பு விழா
புதிய பொலிவுடன் காஞ்சிபுரத்தில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரமாண்ட மறுதிறப்பு விழா
54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
தஞ்சாவூரில் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க கலந்தாய்வு கூட்டம்
தஞ்சாவூரில் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க கலந்தாய்வு கூட்டம்

வீடியோ

Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Netanyahu: பெய்ரூட் தாக்குதல்; இஸ்ரேலை கண்டித்து எச்சரிக்கையும் விடுத்த ட்ரம்ப்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
பெய்ரூட் தாக்குதல்; இஸ்ரேலை கண்டித்து எச்சரிக்கையும் விடுத்த ட்ரம்ப்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
France Modi Macron: பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026‘ மாநாடு; தொடங்கி வைத்த மேக்ரான்; பிரதமர் மோடி பேசியது என்ன.?
பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026‘ மாநாடு; தொடங்கி வைத்த மேக்ரான்; பிரதமர் மோடி பேசியது என்ன.?
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
US-Iran டீலுக்கு ஆப்பு.! ட்ரம்ப்புக்கு எதிராக செயல்படும் நெதன்யாகு; பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
US-Iran டீலுக்கு ஆப்பு.! ட்ரம்ப்புக்கு எதிராக செயல்படும் நெதன்யாகு; பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
TMC Quits NDA: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
190 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் Simple Energy இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
190 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் Simple Energy இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
US Iran Peace Deal: ‘தடை நீக்கம், டெஹ்ரானுக்கு நிவாரணம்‘; US-Iran ஒப்பந்தத்தில் உள்ளது என்ன.? வெளியான முக்கிய தகவல்
‘தடை நீக்கம், டெஹ்ரானுக்கு நிவாரணம்‘; US-Iran ஒப்பந்தத்தில் உள்ளது என்ன.? வெளியான முக்கிய தகவல்
54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
Embed widget