மேலும் அறிய

நவக்கிரகங்களும் வழிபட்ட குருங்குளம் செஞ்சுடேஸ்வர சுவாமி கோயில்.. சிறப்புகள் என்ன?

நவக்கிரகங்களும் வழிபட்ட ஸ்தலம் தஞ்சை மாவட்டம் குருங்குளம் செஞ்சுடேஸ்வரர் கோயில். இத்தலத்திற்கு மேலும் ஒரு பெருமையாக, பெருமாள் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் கம்பீரமாக காட்சி தருகிறார்.

தஞ்சாவூர்: நவக்கிரகங்களும் வழிபட்ட ஸ்தலம் தஞ்சை மாவட்டம் குருங்குளம் செஞ்சுடேஸ்வரர் கோயில். இத்தலத்திற்கு மேலும் ஒரு பெருமையாக பெருமாள் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். ஒரே இடத்தில் சிவனையும், பெருமாளையும் வழிபட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மனம் உருகி நம்பும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரியன் ஒவ்வொரு நாளும் தன்னுடைய இயல்பான பணியை பகல் பொழுதில் முடித்துக்கொண்டு, தான் மறையும் நேரத்தில் சிவபெருமானிடம் ஆசியைச் பெறும் முகமாக தனது ஒளிக்கதிர்களை சிவலிங்கம் மீது படரச் செய்யும் தலமாக இயல்பாகவே அமைந்துள்ளதாக நம்பப்படும், அந்த ஸ்தலம் மிகவும் சிறப்புக்குரியத் தலமாக விளங்குகிறது.

அதுவும் கோயிலும், தீர்த்த  குளமும் அருகருகே இருக்க வேண்டும். இப்படி கோயிலும் குளமும் அருகருகே இருக்கும் இடத்தில், பல முனிவர்களும், சித்தர்களும் வந்து தங்களுடைய சித்து விளையாட்டுகளையும், தவ வலிமைகளால் சிவபெருமானை கட்டுணர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவலிங்கத்தை காணுவதும், அதனை தரிசனம் செய்வதும் காண கிடைக்காத ஒரு காட்சியாகும். அப்படிப்பட்ட ஒரு ஸ்தலம் தான் தஞ்சாவூருக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாகுயர் நாட்டின் தலைமை கிராமமான குருங்குளமாகும். இந்த பெயர் வருவதற்கான ஒரு காரணத்தையும் தெரிந்து கொள்வோம். இந்த ஊரில் கோயிலும், அதனையொட்டி உள்ள குளத்தாலும் தான் குருங்"குளம்" என பெயர் வர காணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது


நவக்கிரகங்களும் வழிபட்ட குருங்குளம் செஞ்சுடேஸ்வர சுவாமி கோயில்.. சிறப்புகள் என்ன?

மேற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளியுள்ள செஞ்சுடேஸ்வரரும்,  தெற்கு நோக்கி அருள்பாலித்து வரும் அம்பாள் அகிலாண்டேஸ்வரியும் அகிலத்தை காக்க வந்ததுபோல், இந்த ஊரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட சடையன் குளம் தீர்த்தம் தான் செஞ்சுடேஸ்வரருக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. . குளக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் செம்புராண் கற்கள் எனப்படும் ஒருவித பழமையான கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. காலப்போக்கில் கோயில் சிதைந்து போனது.

இந்த ஸ்தலத்துக்கு நவக்கிரக நாயகர்கள் ஒன்றுசேர்ந்து வந்து செஞ்சுடேஸ்வரரை தரிசித்து சென்றால் போதும், இந்த கோயிலில் நவக்கிரக சன்னதி ஏதும் கிடையாது. இங்குள்ள சிவபெருமானான செஞ்சுடேஸ்வரரை வழிபட்டாலே " நவக்கிரகங்களையும் வழிபட்டு பேறு கிட்டும்" என நம்பப்படுகிறது. இந்த திருக்கோயில் முன்பாக குளக்கரையில் விநாயகரும், முருகன் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார்.  பைரவரும், தட்சிணாமூர்த்தியும் தனித்தனி சன்னதிகள் அருள்பாலித்து காலப்போக்கில் சன்னதிகள் சேதமானதால் தற்போது ஒரே இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இத்தலத்தில் வேறு ஒரு கூடுதல் சிறப்பும் உள்ளது, பெருமாள் , ஸ்ரிதேவி, பூதேவியுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். ஒரே இடத்தில் சிவனையும், பெருமாளையும் வழிபட கொடுத்து வைத்திருக்க வேண்டும். இக்கோயிலில் தினமும் மாலை நேரத்தில் சூரியன் தன்னுடைய ஒளிக்கதிர்களை செஞ்சுடேஸ்வரர் மீது சிதறவிட்டு மறையும் அற்புத நிகழ்வு தொடர்ந்து இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இங்கு பவுர்ணமி பூஜையும், பிரதோஷ வழிபாடும் ஆன்மிக பக்தர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கோயிலின் அருகே எழுந்தருளியுள்ள வேதமுத்து மாரியம்மன் தான் கிராமத்தின் காவல் தெய்வமாக காத்திருந்து எல்லோரையும் இன்புற்று வாழ வழிநடத்தி செல்கிறார் என நம்பப்படுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget