மேலும் அறிய

காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு காலி சிரிஞ்சுகளை தபாலில் அனுப்பும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள்  குறைந்து வருகிறது. கடந்த மே 21ஆம் தேதியில் இருந்து தினசரி புதிய பாதிப்புகள் இறங்குமுகமாக இருப்பது மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதிதாக 2 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 3,021 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 55 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது 30 ஆயிரத்து 600 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேகத்தில் பாதிப்புகள் குறைந்தால் இன்னும் இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.


காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மத்திய, மாநில அரசுகள் கூறுகிறது. அதேசமயம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்தினால் மூன்றாவது அலை வருவதை தவிர்க்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கேற்ப கடந்த சில மாதங்களாகவே தடுப்பூசி மீதான ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே அதிகரித்துள்ளது. இதற்கு இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட அதிகப்படியான உயிரிழப்புகள் கொடுத்த எச்சரிக்கையும் ஒரு காரணம் அமைந்தது என்றும் சொல்லலாம். தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசை தான் தமிழக அரசு பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறது.


காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 1 கோடியே 86 லட்சத்து 82 ஆயிரத்து 363 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்த குறைவான தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் இருந்து வருகிறது. இதனால் தடுப்பூசி மையங்களில் நாள் ஒன்றுக்கு செலுத்தும் தடுப்பூசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லுகின்றனர்.


காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வலிவுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையைத்தில் காலியான ஊசிகளை  பாரத பிரதமருக்கு தபால் மூலம் அனுப்பி தந்தைபெரியார் திராவிட கழகத்தினர் நூதன கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு செயல்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும், தடையின்றி மாநில பாரபட்சம் இன்றி மத்திய அரசு தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்கவும், ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தடுப்பூசிக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை மனுவை நூதன முறையில் காலி ஊசிகளுடன் தபால் மூலம் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

Thanjavur power cut: தஞ்சை மக்களே நாளை 23.6.2026 கவனமுங்க... என்ன விஷயம் தெரியுங்களா?
Thanjavur power cut: தஞ்சை மக்களே நாளை 23.6.2026 கவனமுங்க... என்ன விஷயம் தெரியுங்களா?
Thanjavur power cut: திருநாகேஸ்வரம் மக்களே நாளை 23.6.2026 உங்களுக்கு வியர்க்கப் போகிறது... எதனால தெரியுங்களா?
Thanjavur power cut: திருநாகேஸ்வரம் மக்களே நாளை 23.6.2026 உங்களுக்கு வியர்க்கப் போகிறது... எதனால தெரியுங்களா?
சொக்கலை மக்களின் கனவு நனவாகும் நாள்: கல்லணைக்கால்வாயில் புதிய நடைபாலப் பணிகள் வெகு மும்முரம்!
சொக்கலை மக்களின் கனவு நனவாகும் நாள்: கல்லணைக்கால்வாயில் புதிய நடைபாலப் பணிகள் வெகு மும்முரம்!
ஆடிப் பிரிவின் ரகசியம்: ஆன்மீகம், அறிவியல், வாழ்வியல் சொல்லும் அதிசயம்!
ஆடிப் பிரிவின் ரகசியம்: ஆன்மீகம், அறிவியல், வாழ்வியல் சொல்லும் அதிசயம்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
TN Govt: வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? - வானிலை அறிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
Embed widget