மேலும் அறிய

காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு காலி சிரிஞ்சுகளை தபாலில் அனுப்பும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள்  குறைந்து வருகிறது. கடந்த மே 21ஆம் தேதியில் இருந்து தினசரி புதிய பாதிப்புகள் இறங்குமுகமாக இருப்பது மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதிதாக 2 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 3,021 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 55 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது 30 ஆயிரத்து 600 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேகத்தில் பாதிப்புகள் குறைந்தால் இன்னும் இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.


காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மத்திய, மாநில அரசுகள் கூறுகிறது. அதேசமயம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்தினால் மூன்றாவது அலை வருவதை தவிர்க்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கேற்ப கடந்த சில மாதங்களாகவே தடுப்பூசி மீதான ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே அதிகரித்துள்ளது. இதற்கு இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட அதிகப்படியான உயிரிழப்புகள் கொடுத்த எச்சரிக்கையும் ஒரு காரணம் அமைந்தது என்றும் சொல்லலாம். தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசை தான் தமிழக அரசு பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறது.


காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 1 கோடியே 86 லட்சத்து 82 ஆயிரத்து 363 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்த குறைவான தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் இருந்து வருகிறது. இதனால் தடுப்பூசி மையங்களில் நாள் ஒன்றுக்கு செலுத்தும் தடுப்பூசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லுகின்றனர்.


காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வலிவுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையைத்தில் காலியான ஊசிகளை  பாரத பிரதமருக்கு தபால் மூலம் அனுப்பி தந்தைபெரியார் திராவிட கழகத்தினர் நூதன கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு செயல்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும், தடையின்றி மாநில பாரபட்சம் இன்றி மத்திய அரசு தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்கவும், ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தடுப்பூசிக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை மனுவை நூதன முறையில் காலி ஊசிகளுடன் தபால் மூலம் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget