மேலும் அறிய

வருது..வருது..! கும்பகோணத்தை குறிவைத்துள்ள பிரம்மாண்ட வர்த்தக நிறுவனம்

சாக்கோட்டை க. அன்பழகன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பேசிய முதல் கன்னிப் பேச்சே கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான்.

தஞ்சாவூர்: கும்பகோணத்தை குறிவைத்துள்ள தனது கிளையை வலுவாக பதிக்க திட்டமிட்டுள்ளது மிகப்பெரிய ஷாப்பிங் நிறுவனம் ஒன்று. அதெல்லாம் சரி. கும்பகோணத்தை டார்க்கெட் செய்ய என்ன காரணம். தஞ்சை மாவட்டத்தில் பெரிய மாநகராட்சி பகுதி என்றால் அது கும்பகோணம்தான். 

டி மார்ட்

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. சாக்கோட்டை க. அன்பழகன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பேசிய முதல் கன்னிப் பேச்சே கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். கட்டமைப்பு வசதி உட்பட பல்வேறு வசதிகள் அடங்கிய கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று இன்றளவும் கோரிக்கைகள் வந்தபடியேதான் உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவித்துவிடுவார்கள் என்ற செய்தி இணையதளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

தஞ்சாவூரை விட கும்பகோணம் பெரிய வர்த்தக நகரமாக உள்ளதால் மாவட்டம் ஆனால் பெரிய நிறுவனங்கள் தங்களின் கிளைகளை கும்பகோணத்தில் அமைத்து விடும் என்பதில் ஐயமில்லை. இதற்கிடையில் நான் உங்களுக்கு முன்னாடி வந்து நிற்கிறேன் என்பது போல் வர்த்தக ரேஸில் வலுவாக கால் ஊன்றி பல மாவட்டங்களில் தனது கிளையை திறந்து வெற்றி கொடி நாட்டியுள்ள டி மார்ட் கும்பகோணம் பக்கம் தன் பார்வையை திருப்பி உள்ளது. 

மக்கள் ஆதரவு

டி மார்ட் நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் அடி எடுத்து வைத்து வருகிறது. இதற்கு மக்களின் அமோக ஆதரவும் உள்ளது என்றால் மிகையில்லை. காரணம் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான். இங்கு உள்ளே "சும்மா" சென்று சுற்றி பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் கூட வெளியில் வரும்போது ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பர்சேஸ் செய்து வருவார்கள். இதுதான் டிமார்டின் வர்த்தக வெற்றியாக உள்ளது.

தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பல்வேறு இடங்களில் டி மார்ட் நிறுவனம் தங்களது கிளைகளை திறந்துள்ளது. சமீபத்தில்தான் நெல்லை மாவட்டத்தில் டிமார்ட் கிளையானது திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து தங்களது கிளைகளை தொடங்கி வருகின்றன.

இடம் தேர்வு

கோவை மாவட்டத்தில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட டி மார்ட் நிறுவனத்தின் கிளைகள் திறக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டி மார்ட் நிறுவனத்தில் பொருட்களின் விலை அனைத்தும் மிகவும் குறைவு என்பதால் மக்கள் கூட்டம் தொடர்ந்து படை எடுத்த வண்ணம் இருக்கும். குறிப்பாக வார கடைசி நாட்களில் டி மார்ட் திருவிழா கோலம் பூண்டுவிடும். அந்தளவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் டி மார்ட்டில் குவிந்து இருப்பார்கள். 

கும்பகோணம் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் வெற்றிக் கொடி நாட்டி வரும் நிலையில் தற்போது இந்த பகுதியை குறி வைத்துள்ள டிமார்ட் நிறுவனம். இதற்காக டி மார்ட் நிறுவன அதிகாரிகள் கும்பகோணம் பகுதிக்கு விசிட் அடித்து தங்கள் நிறுவனம் அமைக்க இடத்தையும் தேர்வு செய்துள்ளனராம். மிக பிரமாண்டமாக அமைக்க வேண்டும் என்பதால் கும்பகோணம் பைபாஸ் பகுதியில் இடம் தேர்வு செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அவ்வாறு அந்த நிலம் உறுதி செய்யப்பட்டால் இந்த டிமார்ட் கிளையானது சுமார் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கும்பகோணத்தில் மிகப்பிரமாண்டமாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 60 ஆயிரம் சதுர அடியை தாண்டி இன்னும் பிரமாண்டமாகத்தான் டிமார்ட் அமைய உள்ளது என்று விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். கும்பகோணம் பைபாஸ் பகுதியாக இருந்தாலும் மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் வாகனங்கள் நிறுத்துவது உட்பட பல்வேறு வசதிகளும் அடங்கிய வகையில் இந்த கிளையை அமைக்க வேண்டும் என்று டி மார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இதற்கு கும்பகோணம் பைபாஸ் பகுதியில் இடத்தை வளைத்து போட இப்போதே பேச்சுவார்த்தைகளும் ஆரம்பம் ஆகி உள்ளது. இந்த பகுதியில் இடம் வைத்துள்ளவர்களுக்கு அடிச்சுச்சு லக்கி ப்ரைஸ் என்கின்றனர் மக்கள். இந்த தகவல் கும்பகோணம் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget