மேலும் அறிய

திருவாரூர் : விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை..

நாளை முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் திருவாரூர் அருகே வெங்காயம் பேரையூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகம் முழுவதுமாக மழைநீர் தேங்கி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்தது கனமழை. ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீர்.
 
அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பொழியும் எனவும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 30ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

திருவாரூர் : விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை..
இந் நிலையில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது மழைபெய்து வருகிறது. நேற்று பகல் நேரத்தில் சிறிதளவு மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் தரைக்கடை வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் மழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில்  திருவாரூரில் 49.6 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 50.4 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 26.4 மில்லி மீட்டரும், குடவாசலில் 30.2 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 16.8 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 20.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 17.6 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.

திருவாரூர் : விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை..
நாளை முதல் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் திருவாரூர் அருகே வெங்காயம் பேரையூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகம் முழுவதுமாக மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கு நாளை மாணவர்கள் வர வேண்டியுள்ள நிலையில் மழைநீரை உடனடியாக ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தொடர் கனமழையின் காரணமாக  பாலையூர் மாவூர் உள்ளிட்ட கிராமங்களில்  அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் இதேபோன்று தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 30 முதல் 40 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் மழை நீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர் வாரவேண்டும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று கிராமப்புறங்களில் வீடுகளை சுற்றி அதிக அளவு மழைநீர் தேங்கி இருக்கிறது குறிப்பாக திருவாரூர் அருகே குவளைக்கால் மூங்கில்குடி உள்ளிட்ட கிராமங்களில்  வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி இருக்கிறது இந்த மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
 
அதேபோன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திருவாரூர் போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது இங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் போக்குவரத்து பணிமனை அலுவலகத்திற்குள் மழைநீர் உட்புகுந்த காரணத்தினால் போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர் உடனடியாக மழைநீர் அகற்றுவதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வழிகளை முழுமையாக தூர்வாரி மழை நீரை வடிய வைத்துள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
மீண்டும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; எங்கே? ஏன்? மாணவர்கள் வேதனை!
மீண்டும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; எங்கே? ஏன்? மாணவர்கள் வேதனை!
Israel Iran War US Order: ஏதோ பெரிசா நடக்கப் போகுது.! அலறும் அமெரிக்கா; 14 நாடுகளில் இருந்து தங்கள் மக்கள் வெளியேற உத்தரவு
ஏதோ பெரிசா நடக்கப் போகுது.! அலறும் அமெரிக்கா; 14 நாடுகளில் இருந்து தங்கள் மக்கள் வெளியேற உத்தரவு
CM Surprise Gift: மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
OPS CAR DRIVER: ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
Embed widget