மேலும் அறிய

தென் தமிழகத்தில் சைவத்தை பரப்ப தருமபுரம் ஆதீனம் மேற்கொள்ளும் ஞானரத யாத்திரை

’’பாண்டிய நாட்டில் சைவத்தை நிலைநிறுத்த ஞானசம்பந்தார் மேற்கொண்ட யாத்திரையை போல் மீண்டும் அங்கு சைவத்தை நிலை நிறுத்துவதற்காக இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன்’’

தஞ்சை மாவட்டம், பள்ளி அக்ரஹாரத்தில் தர்மபுர ஆதீனம் இருபத்தி ஏழாவது குருமகாசன்னிதானதிற்கு கும்ப மரியாதையுடன் மேளதாள வாணவேடிக்கையுடன் வரவேற்பு நடைபெற்றது. தஞ்சாவூரை அடுத்த பள்ளி அக்ரஹாராத்தில் இருபத்தி ஏழாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஞானரதம் யாத்திரை செல்கிறார் அவரை வாணவேடிக்கை மேளதாளம் கச்சேரி உடன் பூரண கும்ப மரியாதை கொடுத்து திருவையாறு ஐயாறப்பர் ஆலய குருக்கள் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர். தருமபுர ஆதீனம் பூந்துறையில் குடமுழுக்கு விழாவிலா கலந்துகொள்கிறார்.


தென் தமிழகத்தில் சைவத்தை பரப்ப தருமபுரம் ஆதீனம் மேற்கொள்ளும் ஞானரத யாத்திரை

காலையில் தருமபுர ஆதீனத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சையை வந்தடைந்தார் பிறகு தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு சாமி தரிசனம் செய்து மீண்டும் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவர் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்டு சிவபெருமானை வழிபடுகிறார் பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை வழிபடுகிறார். அங்கிருந்து  திருநெல்வேலி புறப்பட்டு திருஞானசம்பந்த நிலையத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்  பூந்துறையில் சிவாலயத்தில் முதற்கால யாகசாலை பூஜையில் பங்கேற்று, பிறகு நான்காம் யாகசாலை பூஜையில் பங்கேற்று  மகா சன்னிதானம் முன்னிலையில் குடமுழுக்கு நடைபெறுகிறது. .பிறகு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சுசீந்திரம் சென்று பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று அன்று இரவு 16ஆம் தேதி இரவு தருமபுர ஆதீன மடத்திற்கு சென்றடைகிறார்.


தென் தமிழகத்தில் சைவத்தை பரப்ப தருமபுரம் ஆதீனம் மேற்கொள்ளும் ஞானரத யாத்திரை

 

தஞ்சாவூர் பெரியகோயில் எனும் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோயிலில் தருமபுர ஆதீனம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். அவரை பொது மக்கள், பக்தர்கள் வரவேற்பளித்தனர். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், தருமபுரத்திலிருந்து, முதன்முதலாக ஞானரதயாத்திரை தொடங்கி உள்ளோம். நாங்கள், பூஜைகள் செய்யாமல் வெளியில் செல்லக்கூடாது. பாதயாத்திரையாக தான் செல்ல வேண்டும். நீண்ட துார பாதயாத்திரையாக செல்ல முடியாது என்பதற்காக, கோயில் போன்று வாகனத்தை தயார் செய்து பயணம் செய்கின்றோம்.  எங்களது பூஜா மூர்த்தி மதுரை சொக்கநாதர் என்பதால், தரிசனம் செய்து விட்டு, ராமேஸ்வரம், திருச்செந்துார், திருநெல்வேலிக்கு சென்று, சிவசைலம் மற்றும் திருநெல்வேலியிலுள்ள அங்குள்ள இரண்டு சன்னிதான கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கின்றேன்.

இந்த ஆன்மீகப்பயணம் சமயத்தை பரப்புவதற்காக நடைபெறுகின்றது. சைவத்தை நிலை நிறுத்துவதற்காக, இங்கிருந்து, ஞானசம்பந்தர்,  சோழ நாட்டிலிருந்து, பாண்டியன் நாட்டிற்கு சென்று சைவம் திருநீறும் விளங்க செய்ய வேண்டும் என அங்கு சென்றார். மீண்டும் அங்கு சைவத்தை நிலை நிறுத்துவதற்காக இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இந்த யாத்திரை ஐந்து நாட்களில் முடிவடையும். அடுத்ததாக வடநாட்டில் நடைபெறும் துங்கபத்ரா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 29ஆம் தேதி ஆன்மீக பயணத்தை தொடங்கவுள்ளேன் என்றார்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget