மேலும் அறிய

தஞ்சை: வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி: எஸ்.பி.யிடம் மனு

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்: வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூரை சேர்ந்த ஜீவரத்தினம், ராம்கி, தமிழ்ச்செல்வன், இசைவாணன், நிஷாந்த், சிவா மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா ஏருந்தவாடி பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத்திடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த சதீஸ்வரன் என்பவர் எங்களுக்கு நண்பர்கள் வாயிலாக அறிமுகமானார். இவர் சிங்கப்பூர், நியூசிலாந்து  உட்பட வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதே போல் பலருக்கு வேலை வாங்கி தந்துள்ளேன். இன்னும் பலருக்கு வேலை வாங்கி தருவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார். இவரது பேச்சை நம்பி நாங்கள் லட்சக்கணக்கில் அவரிடம் பணம் கொடுத்தோம். அந்த வகையில் ஜீவரத்தினம் ரூ.6.50 லட்சம், மோகன்தாஸ் ரூ.3.2 | லட்சம், ராம்கி ரூ.1.70 லட்சம், இசைவாணன் ரூ.2.40 லட்சம், தமிழ்ச்செல்வன் ரூ.1 லட்சம், நிஷாந்த் மற்றும் சிவா ரூ.2.03 லட்சம் பணத்தை பல தவணைகளில் சதீஸ்வரனுக்கு வழங்கினோம்.

பல மாதங்கள் கடந்த நிலையிலும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் அவரிடம் தொடர்ந்து நாங்கள் ஏன் இன்னும் வெளிநாட்டிற்கு அனுப்பாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டபோது போலி விசா, வொர்க் பர்மிட் போன்றவற்றை காண்பித்தார். இதை நம்பி நாங்களும்  காத்திருந்தோம். ஆனால் அவர் காண்பித்தவை போலி ஆவணங்கள் என்பது தெரிய வந்தது. 

இது குறித்து சதீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போது அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது மேலும் அவரது மனைவியின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தலைமறைவாக உள்ளனர் எனத் தெரிய வருகிறது. லட்சக்கணக்கில் எங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த சதீஸ்வரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியில் இருந்து கடன் வாங்கியும் நகைகள் மற்றும் வாகனங்களை அடமானம் வைத்து இந்த பணத்தை நாங்கள் கொடுத்துள்ளோம்.

இதனால் நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு சதீஸ்வரனிடமிருந்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும். இதேபோல் அவர் தஞ்சை உட்பட பல பகுதிகளை சேர்ந்தவரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார் எனவும் தெரிய வருகிறது. இவ்வாறு மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று வெளிநாட்டு வேலை என்று கூறி பணம் மோசடி செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் ஏமாந்து விடுகின்றனர். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் வெளிநாட்டு வேலையை எதிர்பார்த்து இப்படி மோசடி நபர்களிடம் சிக்கி கொள்கின்றனர். இதனால் கடன்பட்டு அந்த கடனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பெரும் அவதியடைகின்றனர். இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget