மேலும் அறிய

தஞ்சையில் டீ கடையில் பற்றி எரிந்த சிலிண்டர் - அலறியடித்து ஓடிய மக்கள்

தஞ்சையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கீழவாசல் பகுதியில் திடீரென்று ஒரு டீக்கடையில் இருந்த கேஸ் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட தீவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கீழவாசல் பகுதியில் திடீரென்று ஒரு டீக்கடையில் இருந்த கேஸ் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சையில் மிகுந்த போக்குவரத்து நிறைந்த பகுதி என்றால் அது கீழவாசல்தான். காரணம் மளிகை, மீன் விற்பனை, பாத்திரங்கள், நாட்டு மருந்து கடை, காய்கறி கடைகள், டீக்கடைகள், உணவகங்கள் என்று இப்பகுதியில் ஏராளமான கடைகள் நிறைந்துள்ளது. இதனால் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். லோடு இறக்கும் வாகனங்கள், கிராமப்பகுதிகளில் இருந்து பொருட்கள் வாங்கும் மக்கள் என்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் கீழவாசலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காமராஜ் மார்க்கெட் அருகே ஒரு டீக்கடையில் கேஸ் சிலிண்டரில் இருந்து எரிபொருள் கசிந்தது. இதனால் சிலிண்டரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்துவிட்ட டீ மாஸ்டர் சட்டென்று சிலிண்டரை பயத்தில் வெளியே தூக்கி வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது.

சிலிண்டரில் பற்றி எரிந்த தீ கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பற்றியுள்ளது. இதனால் வாகனங்கள் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பீதியில் மக்கள் கத்திய அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அக்கம்பக்கத்தினர் பற்றி எரிந்த வாகனங்களின் அருகில் நின்றிருந்த மேலும் சில இரு சக்கர வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் அவசர அவசரமாக தங்களின் டூவிலர்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

 


தஞ்சையில்  டீ கடையில் பற்றி எரிந்த சிலிண்டர் - அலறியடித்து ஓடிய மக்கள்

இந்த தீ விபத்தில் டீ மாஸ்டரின் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் அதன் அருகே இன்னொரு வாகனமும் முழுவதும் எரிந்தது. தீ விபத்து குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயும் அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை காவல்துறையின் தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் கீழவாசல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேஸ் சிலிண்டரில் இருந்து எரிபொருள் கசிவை உடனே கவனித்ததால் பெரும் தீவிபத்து மற்றும் உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தீ விபத்து நேர்ந்த நேரத்தில் அதிக மக்கள் நடமாட்டம் இருந்தது. சட்டென்று கேஸ் சிலிண்டரை தூக்கி வெளியில் வைத்ததால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் எரிந்து சாம்பலாகி விட்டது. கேஸ் சிலிண்டர் உபயோகிப்பவர்கள் இதுபோன்ற நேரங்களில் தீயை அணைக்க என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
Embed widget