மேலும் அறிய

பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீட்டிப்பு செய்ததற்கு தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி

குறுவை சாகுபடி முடிந்து டெல்டா பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தடின் பல பகுதிகளில் நாற்று விடுதல், பாய் நாற்றங்கால் பணிகள் நடந்து வருகிறது.

தஞ்சாவூர்: பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30 வரை கால நீட்டிப்பு செய்த அரசுக்கு  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பயிர் காப்பீட்டிற்கு கால அவகாசம் நீட்டித்த அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ சார்பு) நன்றி. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். இராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சோ. பாஸ்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

குறுவை சாகுபடி முடிந்து டெல்டா பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தடின் பல பகுதிகளில் நாற்று விடுதல், பாய் நாற்றங்கால், நாற்று நடும் பணி, உரம் தெளித்தல் உட்பட பல்வேறு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கான பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு   இருந்தது. 

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகமான விளைச்சல் ஏற்பட்டு கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படாமலும், மழையில் நனைந்து அழுகியும், பயிர் முளை விட்டும் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளர் தீவிர சரிபார்ப்பு இயக்கத்தில் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டவர்கள் செயல்படுவதால் காப்பீடு செய்ய தேவையான பட்டா,சிட்டா விவசாயிகளுக்கு வழங்க முடியவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்வதற்கு காலதாமதம் ஆகிறது.

மேலும் சம்பா, தாளடி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக உள்ள நிலையில் பயிர் காப்பீடு செய்ய தாமதம் ஆகிறது. ஏற்கனவே குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பா, தாளடி பயிர்களுக்கான பயிர் காப்பீடு உரிய காலத்தில் செய்ய முடியாத நிலை உள்ளதால் 30ம் தேதி  வரை கால அவகாசம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றியினை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வரும் சம்பா அறுவடை காலத்தில் உரிய முறையில் முன்னேற்பாடாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதலுக்கு தேவையான சணல், கோணிஊசி, சாக்கு, படுதா, ஈரப்பதம் குறித்த சதவீதம், திறந்தவெளி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget