12ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள்? உடனே இந்த வேலைக்கு விண்ணப்பித்து விடுங்கள்
பல்வேறு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 12வது முடித்தவர்கள் முதல் முதுகலைப் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர்: 12-ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள் உடனே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க. இன்னும் 6 நாட்களே இருக்குங்க.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (சென்னை) 20 காலியிடங்களை (கேஸ் ஒர்க்கர், சூப்பர்வைசர்) அறிவித்துள்ளது. தகுதி: 12வது முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை. சம்பளம் ₹28,000 வரை. நேர்காணல் மட்டுமே. வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit - DCPU), சென்னையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால், அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. மொத்தமாக 20 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 12வது முடித்தவர்கள் முதல் முதுகலைப் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.
Project Coordinator: (1 காலிப் பணியிடம்) - சம்பளம்: ரூ.28,000/- (தகுதி: முதுகலைப் பட்டம் - சமூகப் பணி/சமூகவியல் அல்லது தொடர்புடைய துறைகளில்)
Supervisor: (8 காலிப் பணியிடங்கள்) - சம்பளம்: ரூ.21,000/- (தகுதி: பட்டப்படிப்பு - சமூகப் பணி/கணினி அறிவியல் அல்லது தொடர்புடைய துறைகளில்)
Counsellor: (1 காலிப் பணியிடம்) - சம்பளம்: ரூ.23,000/- (தகுதி: பட்டப்படிப்பு - உளவியல்/சமூகப் பணி அல்லது தொடர்புடைய துறைகளில்)
Case Worker: (10 காலிப் பணியிடங்கள்) - சம்பளம்: ரூ.18,000/- (தகுதி: 12வது தேர்ச்சி. நல்ல தகவல் தொடர்புத் திறன் தேவை.)
இந்த வேலைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் குறைவாகவே உள்ளது. இன்னும் 6 நாட்களே உள்ளது. எனவே காலதாமதம் வேண்டாம்.
விண்ணப்பத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26.10.2025
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்.
விண்ணப்பங்களை அக்டோபர் 26, 2025-க்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை – தெற்கு எண்.1, முதல் தளம், புதிய தெரு, ஜிசிசி வணிக வளாகம், ஆலந்தூர், சென்னை – 600016 (District Child Protection Officer, District Child Protection Unit, Chennai – South No.1, First Floor, New Street, GCC Commercial Complex, Alandur, Chennai – 600016) (RTO அலுவலகத்திற்கு அருகில்)
நேரடி நேர்காணல் மூலம் அரசு வேலையைப் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இறுதி தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.





















