மேலும் அறிய

அன்வர் ராஜா பேசுவதற்கு பின்னணியே எடப்பாடிதான்... புகழேந்தி பகீர் குற்றச்சாட்டு

திராவிட கழக தலைவர்களை அசிங்கப்படுத்திய, அவமானப்படுத்திய கட்சிக்கு பின்னால் செல்வது அசிங்கமாக இல்லையா.

தஞ்சாவூர்: அன்வர் ராஜாவை தூண்டிவிட்டு பேச வைத்தது எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தஞ்சையில் நிருபர்களை சந்தித்த அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் பிரச்சாரம் தொடங்கி இருக்கிறார்  ஏற்கனவே பலமுறை பிரச்சாரம் சென்று பல சாதனைகளை படைத்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது புதிய பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

ஏற்கனவே மேற்கொண்ட பிரச்சாரத்தால் என்ன பயன் கிடைத்தது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த பிரச்சாரத்தால் என்ன கிடைக்கப் போகிறது. இந்த பிரச்சாரத்தில் எந்த கொள்கை பற்றி பேசப் போகிறார். திராவிட கொள்கை கொண்ட தலைவர்கள் யாருமே கலந்து கொள்ளாத இந்து முன்னணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களை கலந்து கொள்ள செய்திருக்கிறார்.

இன்று (நேற்று) முதல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் இவர் கட்சிக் கொடியில் அண்ணாவை நீக்கிவிட்டு அமித்ஷாவையோ, மோடியையோ போட்டுக்கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பஸ், லாரி வைத்து யாரையும் அழைத்துக் செல்ல கொள்ளக்கூடாது. கூட்டம் எப்படி வருகிறது என்று பார்ப்போம். பிரச்சாரத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் கொள்கையை சொல்லப் போகிறாரா என்றும் பார்ப்போம். இப்போது கேள்வி கேட்டு பேசும் அன்வர் ராஜா, அமித்ஷாவுடன் அதிமுக கூட்டணி பேசும்போது எங்கே சென்றார். இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தார். உண்மை அதுவல்ல. அன்வர் ராஜாவை தூண்டிவிட்டு பேச வைத்தது எடப்பாடி பழனிச்சாமிதான்.

திராவிட கழக தலைவர்களை அசிங்கப்படுத்திய, அவமானப்படுத்திய கட்சிக்கு பின்னால் செல்வது அசிங்கமாக இல்லையா. அண்ணாமலையை என்று பாஜக வெளியே தூக்கிப் போட்டதோ அன்றைக்கே அந்த கட்சி தனது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டது. விஜய் கூட்டணிக்கு வருவார் என கனவு காண வேண்டாம். அவர் அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். அதனால் விஜய் கூட்டணி வருவார் என்ற எதிர்பார்ப்பே தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு முன்னால் செல்லட்டும். நானும் எனது ஆதரவாளர்களும் பின்னாலேயே செல்கிறோம். இந்த தேர்தலில் எடப்பாடி கூட்டணிக்கு 10 இடங்கள்தான் கிடைக்க போகிறது. மக்களை காக்க என்று பிரச்சார கோஷம் போட்டு செல்வது வீண்தான்.

பாமகவை சேர்ந்த ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் மோதிக் கொள்வதை நிறுத்தவில்லை என்றால் கட்சி காணாமல் போய்விடும் மக்கள் துரத்தி அடிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Embed widget