மேலும் அறிய

இந்தி மொழி திணிப்பை கண்டித்து தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து திமுகவினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக, தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சாவூர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் வரவேற்றார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இரா.தெட்சிணாமூர்த்தி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் து.செல்வம்,மகேஷ் கிருஷ்ணசாமி, கும்பகோணம் மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், தஞ்சாவூர் மாநகர துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா அலுவலக மொழி தொடர்பாக அளித்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்ற கொள்கையை பாஜக கைவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியா முழுவதும் இந்தி மொழியை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இந்தி மொழி திணிப்பை கண்டித்து தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் நிறுவனத்தில் கட்டாய மொழியாக இந்தியை திணிக்ககூடாது. மத்திய அரசின் பணிக்காக நடத்தப்படும் தேர்வில் இந்தியை திணிக்க கூடாது. அலுவலக மொழியாக உள்ள ஆங்கிலமொழியை ஒழிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா அலுவலக மொழி தொடர்பாக அளித்த அறிக்கையில் அனைத்து தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாகவும் இதர பயன்பாடுகளுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும். ஆங்கில மொழியை பயன்படுத்துவது ஆப்ஷனலாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 

இந்தி மொழி திணிப்பை கண்டித்து தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம்

இந்தி ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா விதியாலயாக்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயிற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிறது அமித்ஷா குழுவின் பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல், வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தி மொழி பேசாத மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget