மேலும் அறிய

இந்தி மொழி திணிப்பை கண்டித்து தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து திமுகவினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக, தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சாவூர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் வரவேற்றார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இரா.தெட்சிணாமூர்த்தி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் து.செல்வம்,மகேஷ் கிருஷ்ணசாமி, கும்பகோணம் மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், தஞ்சாவூர் மாநகர துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா அலுவலக மொழி தொடர்பாக அளித்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்ற கொள்கையை பாஜக கைவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியா முழுவதும் இந்தி மொழியை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இந்தி மொழி திணிப்பை கண்டித்து தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் நிறுவனத்தில் கட்டாய மொழியாக இந்தியை திணிக்ககூடாது. மத்திய அரசின் பணிக்காக நடத்தப்படும் தேர்வில் இந்தியை திணிக்க கூடாது. அலுவலக மொழியாக உள்ள ஆங்கிலமொழியை ஒழிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா அலுவலக மொழி தொடர்பாக அளித்த அறிக்கையில் அனைத்து தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாகவும் இதர பயன்பாடுகளுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும். ஆங்கில மொழியை பயன்படுத்துவது ஆப்ஷனலாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 

இந்தி மொழி திணிப்பை கண்டித்து தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம்

இந்தி ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா விதியாலயாக்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயிற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிறது அமித்ஷா குழுவின் பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல், வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தி மொழி பேசாத மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இடைத்தேர்தலுக்கு முன் முதல்வர் விஜய் எண்ட்ரி... திருச்சி அரசியலில் அனல் பறக்கும் சூழல்!
இடைத்தேர்தலுக்கு முன் முதல்வர் விஜய் எண்ட்ரி... திருச்சி அரசியலில் அனல் பறக்கும் சூழல்!
வட்டாட்சியர் அலுவலகங்களில் பரபரப்பு... வரும் 4ம் தேதி தொடங்கும் ஜமாபந்தி!
வட்டாட்சியர் அலுவலகங்களில் பரபரப்பு... வரும் 4ம் தேதி தொடங்கும் ஜமாபந்தி!
ஆரோக்கியம் தரும் அற்புத தானியங்கள்... சிறுதானியங்களின் மறுமலர்ச்சி!
ஆரோக்கியம் தரும் அற்புத தானியங்கள்... சிறுதானியங்களின் மறுமலர்ச்சி!
ஆர்ப்பாட்டங்களால் அதிர்ந்த தஞ்சாவூர்: ஒருபுறம் விவசாயிகள், மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்கள்
ஆர்ப்பாட்டங்களால் அதிர்ந்த தஞ்சாவூர்: ஒருபுறம் விவசாயிகள், மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Karnataka CM Resignation: கர்நாடகாவில் முதல்வர் சஸ்பென்ஸ் முடிந்தது; பதவி விலகும் சித்தராமையா, பதவி ஏற்கும் DK சிவகுமார்
கர்நாடகாவில் முதல்வர் சஸ்பென்ஸ் முடிந்தது; பதவி விலகும் சித்தராமையா, பதவி ஏற்கும் DK சிவகுமார்
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
Super Splendor XTEC 2.0: வாரே வா.! 72 கிமீ மைலேஜ்; ப்ரீமியம் அம்சங்கள்; அறிமுகமான புதிய ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0
வாரே வா.! 72 கிமீ மைலேஜ்; ப்ரீமியம் அம்சங்கள்; அறிமுகமான புதிய ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0
Embed widget