மேலும் அறிய

திருவாரூரில் தொடர் கனமழை - மேலும் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

’’ஏக்கருக்கு 20,000 இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை’’

காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, இதேபோன்று காரைக்கால், புதுச்சேரி, உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பத்து தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை விட்டிருந்த நிலையில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களில் சூழ்ந்திருந்த மழை நீரை வடிய வைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையத்தின் சார்பில் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

திருவாரூரில் தொடர் கனமழை - மேலும் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
இந்த நிலையில் டெல்டா மாவட்டமாகிய திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை இரவும் பகலுமாக  கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு வரை மழை விடாமல் தொடர்ந்து பெய்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை விட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் இரண்டாம் முறை நெல் பயிர்கள் மூழ்கும் என்ற அச்சத்தில் உள்ளனர். நேற்று மதியம் முதல் பெய்துவரும் தொடர் கனமழையின் எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில் மீண்டும் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் அமைச்சர்கள் குழு கடந்த வாரம் பெய்த தொடர் கன மழையில் திருவாரூர் மாவட்டத்தில் 41 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதாக அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நேற்று மதியம் முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரண்டாவது முறையாக மேலும் 10 ஆயிரம் ஏக்கர் மழை நீரில் மூழ்கியுள்ளன.

திருவாரூரில் தொடர் கனமழை - மேலும் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
 
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரில் பயிர்கள் மூழ்கியுள்ளது. இரண்டு முறை உரம் தெளித்தும் பயனற்றுப் போய்விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இடுபொருள் மட்டும் போதாது ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பயிர் பாதித்த இடங்களை ஆய்வு செய்து கூடுதல் நிவாரண தொகையை பெற்றுத் தர வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!
Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
Tirunelveli: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்.. இறந்த குழந்தை புதைப்பு.. நெல்லையை அதிரவைத்த கணவன்!
Tirunelveli: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்.. இறந்த குழந்தை புதைப்பு.. நெல்லையை அதிரவைத்த கணவன்!
Watch Video: கண்காட்சியில் கழண்டு விழுந்த ராட்சத ராட்டினம்.. பதற வைக்கு வீடியோ!
Watch Video: கண்காட்சியில் கழண்டு விழுந்த ராட்சத ராட்டினம்.. பதற வைக்கு வீடியோ!
Rolls Royce electric SUV: மிருகத்தை EV மோடில் இறக்கும் ப்ரீமியம் கார் ப்ராண்ட்.. 530KM ரேஞ்ச், மூச்சு முட்டும் விலை..!
Rolls Royce electric SUV: மிருகத்தை EV மோடில் இறக்கும் ப்ரீமியம் கார் ப்ராண்ட்.. 530KM ரேஞ்ச், மூச்சு முட்டும் விலை..!
Embed widget