மேலும் அறிய

மணல் குவாரிகளை திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்...!

மணல் அள்ளும் ஏழைத் தொழிலாளர்களின் மீது வழக்குப் போடுவது, கைது செய்து சிறையில் அடைப்பது, வண்டி மாடுகளை பறிமுதல் செய்வது போன்ற இரக்கமற்ற நடவடிக்கைகளை கைவிட கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை பாதுகாத்திட பட்டுக்கோட்டை தாலுகா தொக்காலிக்காடு, சின்ன ஆவுடையார் கோவில், பேராவூரணி தாலுகா பெத்தனாட்சிவயல் ஆகிய இடங்களில் மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி சிஐடியு தஞ்சை மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாட்டு  வண்டிகளுடன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மணல் குவாரிகளை திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்...!

போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர்  ஜெயபால் தலைமை வகித்தார். முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதிஆழ்வார் முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி வாழ்த்திப் பேசினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் பட்டுக்கோட்டை கந்தசாமி, பேராவூரணி குமாரசாமி மற்றும் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தில், பட்டுக்கோட்டை தாலுகா தொக்காலிக்காடு, சின்ன ஆவுடையார் கோவல் ஆகிய இடங்களில் இயங்கி வந்த மணல் குவாரியை  மீண்டும் திறக்க வேண்டும்.

பேராவூரணி தாலுகா பெத்தனாட்சிவயல் அம்புலி ஆற்றில், மாட்டு வண்டியில் மட்டும் மணல் எடுக்க தேர்வு தேர்வு செய்யப்பட்ட புதிய மணல் குவாரிகளை திறக்க வேண்டும். லாரி, டிப்பர், டாரஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களில் நடைபெறுகின்ற மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பிழைப்புக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளும் ஏழைத் தொழிலாளர்களின் மீது வழக்குப் போடுவது, கைது செய்து சிறையில் அடைப்பது, வண்டி மாடுகளை பறிமுதல் செய்வது போன்ற இரக்கமற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

மணல் குவாரிகளை திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்...!

மாடுகளை பிடித்து அடைத்து வைத்து பட்டினி போட்டு கொல்லக் கூடாது. மாட்டுவண்டி தொழிலார்களுக்கு என தனியாக நல வாரியம் அமைத்து, அடையாள அட்டை வழங்க வேண்டும். போலி மாட்டுவண்டி பதிவுகளை ரத்து செய்ய வேண்டும், மாட்டு வண்டித்தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களுடன் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் ஒரு வார கால அவகாசத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. குவாரியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாடுகளுடன், மாட்டு வண்டிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என மாட்டுவண்டி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக தொழிற்சங்க அலுவலகத்தில், இருந்து மாட்டு வண்டிகள் முன்செல்ல, 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

தலைப்பு செய்திகள்

150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
Thanjavur power cut: தஞ்சை மக்கள் கவனத்திற்கு - நாளை (09-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
Thanjavur power cut: தஞ்சை மக்கள் கவனத்திற்கு - நாளை (09-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget