மேலும் அறிய

’’கோயிலை பூட்டியது போல் சர்ச், மசூதிக்கு பூட்டுபோட தைரியம் இருக்கா ?’’ - கருப்பு முருகானந்தம் கேள்வி

’’கடவுள் காப்பாற்றுவார் என்ற நிலைபோய் கடவுளை நாம் காப்பற்ற வேண்டிய நிலை வந்துவிட்டது’’

வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில், தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களையும் திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் பெரிய கோயில் எனும் பிரகதீஸ்வரர் கோயில், முன்பு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட பாஜக சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் கருப்புமுருகானந்தம், மாவட்ட தலைவர்கள் இளங்கோவன், சதீஷ், வெங்கடேசன், தேவராஜ், ராகவன், பொறுப்பாளர்கள் ராமலிங்கம், கண்ணன், சிவா, அண்ணாமலை, மாநில அமைப்பு சாரா தலைவர் பாண்டித்துரை மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில்களை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களிட்டனர். பாஜக மாநில துணை தலைவர் கருப்புமுருகானந்தம் பேசுகையில்,


’’கோயிலை பூட்டியது போல் சர்ச், மசூதிக்கு பூட்டுபோட தைரியம் இருக்கா ?’’ - கருப்பு முருகானந்தம் கேள்வி

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலுள்ள இந்துக்கள் வாக்குகள் பெற்று திமுகவை வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பே, திமுகவின் கூட்டணி இந்து விரோத கூட்டணியாக இருந்தது. கலாச்சாரப்பற்றி பேசுவது, வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்துவது என்பதை வாடிக்கையாக அந்த கூட்டணி பேசி வந்தது. ஆனால் இந்து வழிபாடு, கலாச்சாரம் மற்றும் எதை பற்றி பேசினாலும், அந்தகூட்டணிக்கு வாக்களித்த காரணத்தால் திமுக ஆட்சி தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் இந்துக்களுக்கு ஒரு எழுச்சி ஏற்பட்டது. கந்தசஷ்டி கவசம் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மற்றும் அனைவரும், 90 சதவீதம் பேர் திமுகவில் உள்ளவர்கள் என்று சொன்னார்கள். அந்த இந்துக்களுக்கு சூடு, சூரணை, மானம் இருக்கா, உன் மனைவி கும்பிடுகிற, குடும்பத்தை சேர்ந்தவர்கள், நீங்கள் கும்பிடுற கோயிலை பூட்டி வைத்துள்ளார்கள். ஆனால் சர்ச்சில் பூட்டு கிடையாது, சர்ச்சில் கொடியேற்ற விழாவில் பல லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். ஆனால் தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களுக்கு தடை. வௌ்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாடு கிடையாது. கோயில் பூட்டி வைக்கும் அளவிற்கு தைரியம் வந்தது என்றால், இந்துக்களை பற்றி எவ்வளவு கேவலமாக நினைகின்றான். பூட்ட வேண்டும் என்றால், சர்ச், மசூதிகளையும் பூட்ட வேண்டும்.  இதனை நிறுத்த தைரியம் இருக்கா, யோக்கியதை இருக்கா, பூட்ட முடியுமா.


’’கோயிலை பூட்டியது போல் சர்ச், மசூதிக்கு பூட்டுபோட தைரியம் இருக்கா ?’’ - கருப்பு முருகானந்தம் கேள்வி

அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள அதிகாரிகள் பூட்டு போட்டு விடுகிறார்கள்.  அறநிலையத்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளும் கொள்ளைக்காரன். கோயில் பணத்தை கொள்ளையடிக்கின்றான். கோயில் இடத்தை எவனுக்காவது வாடகைக்கு விட்டு, வருமானத்தையும் பாக்கின்றான். அறநிலையத்துறை அதிகாரிகள், கோயிலை மேம்படுத்துவதற்காகவோ, கோயிலின் சிறப்புகளை பற்றி மக்கள் மத்தியில் கொண்டு போவதற்கோ, தஞ்சாவூர் பெரிய கோயிலின் சிறப்பை உலக அளவில் எடுத்து செல்லவதற்கோ, எந்த அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருத்தனும் கிடையாது. அனைத்து அதிகாரிகளும் எவ்வளவு கொள்ளையடிக்கலாம், சொத்து, வருமானம் வருது, தனக்கு எவ்வளவு வருகிறது என்பதை பார்க்கத்தான் இருக்கின்றார்கள். அரசு அறிவித்தவுடன், கோயில் கேட்டில் பூட்டை போட்டு, உள்ளே போகாதே சொல்கிறான். அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும், இந்து உணர்வு இருக்க வேண்டும், ஆனால் இப்போதுள்ள அதிகாரிகளுக்கு எதுவும் கிடையாது.

திருச்செந்துார் கோயிலில் நகைகளை கொள்ளையடித்தவர் அங்கிருந்த அறநிலையத்துறை அதிகாரிகள். இப்போதுள்ள அறநிலையத்துறையில் உள்ளவர்களுக்கு கடவுள் பக்தி, நம்பிக்கை கிடையாது, வருமானத்தை மட்டுமே பார்க்கின்றவர்களை எல்லாம் அதிகாரிகளாக நியமனம் செய்ததால், அரசு கோயில் பூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டதும், உடனே பூட்டி விட்டு சென்று விடுகிறான். ஆனால் வேளாங்கண்ணி, நாகூர் தர்காவில் உள்ளிட்ட இரண்டு சமுதாய வழிபாட்டுதலங்களிலும் பூட்டு போடவில்லை.  தமிழகத்திலுள்ள கோயில் பூட்டுவதற்கான தைரியத்திற்கான காரணம், என்ன பேசினாலும், செருப்பால் அடித்தாலும், இந்துக்களுக்க உணர்வு வராது, ஒற்றுமை, எழுச்சி வராது, எதை செய்தாலும் கண்டுகொள்ளமாட்டான் என்ற காரணத்தினால், திமுகவிற்கு கோயில் பூட்டுவதற்கான தைரியம் வந்தது.


’’கோயிலை பூட்டியது போல் சர்ச், மசூதிக்கு பூட்டுபோட தைரியம் இருக்கா ?’’ - கருப்பு முருகானந்தம் கேள்வி

இந்துக்களை மதமாற்றம் செய்ய துாண்டுகிறான். கிறிஸ்துவர்கள் மத்தியில் பேசும் போது, உங்களுடைய வாக்கினால் தான் முதல்வரானேன், திமுக ஆட்சி அமைந்தது என்று முக.ஸ்டாலின் சொல்கின்றார். தமிழகத்திலுள்ள மீதமுள்ள இந்துக்கள் மதமாறிவிட்டால், சர்ச்சிலும், பள்ளிவாசலிலும் கூட்டம் போட்டு, தொடர்ந்து, திமுகவிற்கே ஒட்டு போட்டுவிடுங்கள் என்று சொல்லி விடுவான்.  அதன் பிறகு நாம் சாகும் வரை, நமது குழந்தை, பேரன், இந்த நாட்டின் ராஜா மாதிரி, மந்திரி மாதிரி, நம்முடைய  குடும்பமே ஆட்சி நடத்தலாம் என திமுக முடிவு செய்துவிட்டது.  இந்துக்கள் எல்லாம் மதமாறி போய் விட்டால், பண்பாடு, கலாச்சாரம், வழிபாட்டு முறைகள் நம்பிக்கை குறைந்து போனால் தான், இந்துக்கள் அடுத்த மதத்திற்கு போவார்கள் என்று திமுக அடுத்த மதத்திற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்து கோயில்களில் உள்ள நகைகளை எல்லாம்  உருக்கி, தங்ககட்டிகளாக மாற்றி, தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். கோயில் சொத்துக்கள், நகைகளுக்கு சொந்தகாரர் கடவுள் தான். இவர்கள் நகைகளை உருக்குகின்றோம் என நகைகளை அள்ளி சென்று விடுவார்கள். தங்க கிளி, நவபாஷன சிலைகளை விற்பனை செய்து விடுகிறான்.  இந்தியாவிலுள்ள கடவுள் சிலைகளை மீட்டு எடுப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி முயற்சி எடுத்து, உலகலுள்ள பல்வேறு நாடுகளிலுள்ள சிலைகளை மீட்ட எடுத்து வருகிறார்.

தமிழகத்தில் திராவிட கழக ஆட்சியில், தமிழகத்திலுள்ள பெரும்பாலான சிலைகளை கடத்தி விற்பனை செய்து விட்டார்கள். பல இடங்களில் போலி சிலைகளை மட்டும் வைத்துள்ளார்கள். கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்று இருந்த நிலை போய், கடவுளை நாம் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்தந்த கோயில் சொத்துக்களை,அந்த கோயிலுக்கு தான் பயன்படுத்த வேண்டும். கோயில்களில் உள்ள நகைகளை கொள்ளையடிப்பதற்காக தான் இந்த ஏற்பாடு நடைபெறுகின்றது.

சர்ச் மற்றும் பள்ளிவாசல்களில் வருமானம் எடுத்து கொண்டு, மற்ற சர்ச், பள்ளிவாசல்களுக்கு பயன்படுத்தப்போகிறோம் என்று சொல்ல தைரியம் இருக்கா, திமுகவிற்கு ஆன்மை இருக்கா, ஆன்மை இருக்கும் அரசாங்கமாக இருந்தால், இங்குள்ள இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கு உண்டு என்ற ஒரே நிலையை கடைபிடிக்க வேண்டும். திமுகவிற்கு ஆன்மையும் கிடையாது, ஒன்றும் கிடையாது, அவர்கள் மீது கை வைத்தால், பெண்ணாட்டி, குழந்தைகளை கொல்வான். குண்டு வைத்து கொல்வான். அவர்கள் ஒட்டு போட மாட்டான், இவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள். அவர்கள் ஒட்டு போட மாட்டார்கள் என்ற பயத்தால், சர்ச், மசூதி மேல் கைவைப்பதில்லை. சர்ச்சில் வரும் வருமானத்தை கொண்டு,  இந்துக்களை  மதம் மாற்ற செய்ய பயன்படுத்துகிறார்கள். பள்ளிவாசல்களில் வரும் வருமானத்தை வைத்து கொண்டு பயங்கரவாதிகளை, தீவிரவாதிகள், அந்நியநாட்டு ஆதரவாக இருப்பவர்களுக்கு ஊக்குவிக்கப் பயன்படுத்துகின்றான். அவர்களது பணத்தை எடுத்து பயன்படுத்த யோக்கியதை கிடையாது. கடை தேங்காயை எடுத்த வழி பிள்ளையாருக்கு டைத்த கதை போல், நம் பணத்தை எடுத்த வாரி வழங்குகின்றார்.

திமுக குடும்பத்தில் உள்ளவர்கள் உலக பணக்காரர்களாகவும், ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்களாக இருக்கின்றார்கள். அவர்களிடமுள்ள  லட்சக்கணக்கான கோடி சொத்துக்களை பறித்த கோயில்களுக்கு கொடுக்க வேண்டியதானே. ஆனால் அது உங்களால் முடியாது. இந்து கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்கிறார்கள்.  யாருடைய நிலத்தை யாருக்கு பட்டா வழங்குவது.  கோயில் நிலத்தை இஸ்லாமியர்கள் தான் அதிகமாக ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு பட்டா கொடுப்பது மூலம், கோயில் நிலத்தை தாரைவார்த்தால், நிரந்தரமாக ஒட்டு கிடைக்கும். ஆந்திரா அரசு அறிவித்தது போல், இந்து கோயில் நிலங்களை, இந்துக்களுக்கு மட்டும் பட்டா வழங்க வேண்டும். கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு, கோயில் நிலத்தை கொடுக்க நீ யாருடா, அவர்களுக்கு வழங்குவதற்காக தான் பட்டா கொடுக்கின்றோம் என்று அறிவித்துள்ளார்கள். பொது மக்களுக்கோ, ஏழைகளுக்கோ, இல்லாதவர்களுக்கோ, இந்துக்களுக்கோ கொடுப்பதற்காக அறிவிக்க வில்லை. இந்த நாட்டிலுள்ள கிறிஸ்துவர்கள், மூஸ்லீம்களுக்கு தாரை வார்க்கப்பார்க்கின்றார்கள். திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமா செயல்பட்டு வருகின்றது.  இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்பதை கவனமாக இருக்கின்றார்கள் என்றார். இதில் பாஜக மாநில நிர்வாகிகள், பெண்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Embed widget