குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அனல் கொழு விழா பூஜை
இந்த ஆலைக்கு தஞ்சை, ஒரத்தநாடு, வல்லம், கந்தர்வக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு அரவைக்கு கொண்டு வரப்படும்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவை பருவம் தொடங்க உள்ளதை ஒட்டி இன்று அனல் கொழு விழா பூஜை நடந்தது.
தஞ்சை- புதுக்கோட்டை வழித்தடத்தில் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. ஏறத்தாழ 36 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான கரும்பு ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆலைக்கு தஞ்சை, ஒரத்தநாடு, வல்லம், கந்தர்வக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு அரவைக்கு கொண்டு வரப்படும். தஞ்சை மாவட்டம் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. இங்கு 2025-26ம் ஆண்டுக்கான அரவை பருவம் வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி துவங்குகிறது.
இதை முன்னிட்டு நேற்று அனல் கொழுவிழா பூஜை சர்க்கரை ஆலை பாய்லர் பகுதியில் நடந்தது. ஆலைக்கு தேவையான மின்உற்பத்தி தயாரிப்பதற்காக இந்த விழா நடந்தது. இதில் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.
பின்னர் ஆலை தலைமை நிர்வாகி ராமன் கூறுகையில், வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி அரவைப் பணி துவங்க ஆயத்தமாக உள்ோம். கரும்பு விவசாயிகள் அனைவரும் உரிய நேரத்தில் கரும்புகளை வெட்டி ஆலைக்கு அனுப்பி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















