மேலும் அறிய

பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து தொல்லியல் பொருட்களும் மத்திய அரசுக்கு  உட்பட்டது - புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம். செல்வம்

சீர்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், செப்பேடுகளை தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க மத்திய அரசின் நடவடிக்கை எடுக்கும் என புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம். செல்வம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 16 -ம் தேதி யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோன்றிய பொழுது 22 ஐம்பொன்னாலான சிலைகளும், 55 பீடம் மற்றும் 462 செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து ஐம்பொன் சிலைகளும் மற்றும் செப்பேடுகள் கோயிலின் பாதுகாப்பு அறையில் வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.


பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து தொல்லியல் பொருட்களும் மத்திய அரசுக்கு  உட்பட்டது - புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம். செல்வம்

தொடர்ந்து 17-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை 6 பேர்  கொண்ட  குழுவினர் சீர்காழி சட்டநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து  கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது இதுவரை தமிழ்நாட்டில் ஓலை சுவடியில் எழுதிய பதிகங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், முதன்முறையாக அதிக அளவு பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டு தற்போது இங்கு சீர்காழி தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் விலைமதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு கருதி கூடுதலாக இரும்பு கிரில் கேட் பொருத்தப்பட்டுள்ளது. 


பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து தொல்லியல் பொருட்களும் மத்திய அரசுக்கு  உட்பட்டது - புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம். செல்வம்

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மீண்டும் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் கிடைக்க பெற்ற சிலைகள் குறித்து கடந்த சில தினங்களுக்கு மூன்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 16 -ம் இரவு வேளையில் சிலைகளை எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இன்று  அவைகள் சரியாக உள்ளதா? காவல்துறை பாதுகாப்பு குறித்தும் மேலும், நாகப்பட்டினம் அருங்காட்சியக காப்பாட்சியர் வரவழைத்து அவர் பார்வையிட்டு சிலைகள் தொடர்பாக கருத்து கேட்பதற்காக ஆய்வு செய்ததாகவும்,  அருங்காட்சியக காப்பாட்சியர் தற்போது சிலை மற்றும் செப்பேடுகள் கெமிக்கல்ஸ் கொண்டு சுத்தம் செய்த பின்னர்தான் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும் என்றும்,



பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து தொல்லியல் பொருட்களும் மத்திய அரசுக்கு  உட்பட்டது - புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம். செல்வம்

தொடர்ந்து வரும் 26 தேதி இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவுடன் காப்பாட்சியர் வருவதாகவும், அந்த குழுவில் ஆய்வுக்கு பின் அளிக்கும் தகவலின் அடிப்படையில்,  பூமிக்கு அடியில் கிடைத்த சிலைகள் தொடர்பாக அரசு அதற்கான சட்டதிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, சிலை தொடர்பாக கேசெட்டில் வெளியீட்டு அதன் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து எவ்வித முடிகளுக்களுக்கும் வர முடியாது, தொல்லியல் துறை அளிக்கும் தகவலின் அடிப்படையில் அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார்.


பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து தொல்லியல் பொருட்களும் மத்திய அரசுக்கு  உட்பட்டது - புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம். செல்வம்

மேலும், ஆட்சியர் கூறியதை போன்று  நேற்று நாகப்பட்டினம் அருங்காட்சியகம் காப்பாட்சியாளர் மணிமுத்து தலைமையிலான குழுவினர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் குறித்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் வட்டாட்சியர் செந்தில் முன்னிலையில் ஆய்வு செய்தனர். சிலைகள் மற்றும் செப்பேடுகள் எந்த ஆண்டை சேர்ந்தவை, அளவு, உயரம், அளம், எடை உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அவற்றின் விபரங்களை அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீர்காழி சட்டநாதர் கோயில் பூமிக்கு அடியில் கிடைத்த சிலைகள், செப்பேடுகள் குறித்தும் முழு விவரம் அறிவதற்கு பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். மேலும் இப்பகுதி பக்தர்கள் கோயிலில் கிடைத்த சிலைகளை வேறு எங்கும் கொண்டு செல்லாமல் கோயில் வளாகத்திலேயே அரசு அருங்காட்சியகம் அமைத்தது காக்க வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.


பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து தொல்லியல் பொருட்களும் மத்திய அரசுக்கு  உட்பட்டது - புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம். செல்வம்

இந்த சூழலில் கோயில் சிலை காண அவ்வபோது அரசியல் பிரபலங்கள், தலைவர் வந்து பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று சீர்காழி சட்டை நாதர் கோயிலில் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம், செல்வம் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து சட்டைநாதர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டு தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றார். தொடர்ந்து பத்திரிகையாளர் சந்தித்த அவர் தெரிவிக்கையில், பழமைவாய்ந்த சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை மத்திய அரசின் பிரதிநிதியாக பார்வையிட வந்துள்ளதாகவும்.  பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து  தொல்லியல் பொருட்களும் மத்திய அரசுக்கு  உட்பட்டது. சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகளை தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
Embed widget