மேலும் அறிய

அரை மணிநேரம் பரபரன்னு மாறிய ரயில் நிலையம்... அப்படி என்ன நடந்தது?

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வெடிகுண்டு இருந்தால் அதை எவ்வாறு பாதுகாப்பாக எடுத்து வெடிக்கச் செய்வது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ரயில்வே பாதுகாப்பு படையினர் செய்து காட்டினர். 

தஞ்சாவூர்: ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வெடிகுண்டு இருந்தால் அதை எவ்வாறு பாதுகாப்பாக எடுத்து வெடிக்கச் செய்வது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகள் முன்னிலையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் செய்து காட்டினர். 

ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரயில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ரயில் பயணம் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் பொருட்கள் குறித்து பயணிகள் விழிப்புணர்வு பெற வேண்டும். அதில் வெடிகுண்டு இருந்தால் அதை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் எவ்வாறு பாதுகாப்பாக அகற்றி வெடிக்கச் செய்வார்கள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் நடத்தி காட்டப்பட்டது. 


அரை மணிநேரம் பரபரன்னு மாறிய ரயில் நிலையம்... அப்படி என்ன நடந்தது?

பயிற்சி பெற்ற 32 ரயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் 

இதற்காக வெடிகுண்டுகளை அகற்றும் பயிற்சி பெற்ற 32 ரயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்தனர். இவர்கள் வெடிகுண்டு இருந்தால் அதை ஆய்வு செய்வது, பாதுகாப்பாக அகற்றுவது, பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் வெளியேற்றுவது, மீட்கப்பட்ட வெடிகுண்டை ரயில் நிலையத்தில் இருந்து அகற்றி பாதுகாப்பாக வெடிக்கச் செய்வது போன்றவற்றில் மிகவும் திறம்பட பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பைக்கூடையில் வெடிகுண்டு இருப்பதுபோன்ற பாவனை

ரயில்வே பாதுகாப்பு படை திருச்சி மண்டல பயிற்சி மைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் வந்த இவர்கள் தஞ்சை ரயில் நிலையத்தில் ஒரு குப்பைக்கூடையில் வெடிகுண்டு இருப்பது போன்ற ஒரு பார்சலை அகற்றுவது குறித்து விரிவாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். முதலில் இதில் வெடிகுண்டு இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து மெட்டல் டிடெக்டரை கொண்டு வெடிகுண்டை ஆய்வு செய்து உறுதிப்படுத்துவது, பின்னர் ஸ்கேனர் வாயிலாக வெடிகுண்டு எந்த ரகம், அதன் தன்மை குறித்து ஆய்வு செய்வது, பின்னர் பாம் பிளாங்கட்டை கொண்டு அந்த வெடிகுண்டை முழுமையாக மூடுவது போன்றவற்றை செய்து காட்டினர். இதை பார்த்த பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படைவீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கைதட்டி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

வெடிகுண்டை அகற்றி வெடிக்க செய்தல்

பின்னர் முழுமையான பாதுகாப்பு கவசம் அணிந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் அந்த வெடிகுண்டை அகற்றி வெளியில் எடுத்துச் சென்று வெடிக்க செய்வது போன்றவற்றையும் செய்துகாட்டினார். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை ரயில் நிலையத்தில் நடத்தப்படுவது முதல்முறை. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர். 


அரை மணிநேரம் பரபரன்னு மாறிய ரயில் நிலையம்... அப்படி என்ன நடந்தது?

ரயில் பயணிகள் கருத்து

இதுகுறித்து ரயில் பயணிகள் தரப்பில் கூறுகையில், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிச்சயம் மக்களுக்கு பயன்படும். ஒயர்களுடன் ஏதேனும் கேட்பாரற்ற பொருட்கள் கிடந்தால் அதை கவனித்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களிடம் தெரிவிக்க வேண்டும். நமக்கு என்ன வந்தது என்று நினைக்கக் கூடாது. இது உண்மையில் மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்தது. பாதுகாப்பு படைவீரர்கள் தங்களின் உயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை எவ்வாறு கண்டறிந்து அதை அகற்றுகின்றனர் என்பதை கண்கூடாக பார்த்தபோது அவர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Embed widget