மேலும் அறிய

ரூ.22 கோடி மதிப்பிலான மிகப்பழமையான 6 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் - கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

Thanjavur Iambon idols: தஞ்சாவூரில் ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 3 பேரை, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

Thanjavur Iambon idols: தஞ்சாவூரில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான 6 ஐம்பொன் சிலைகள் கடத்தல் கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் தீவிர கண்காணிப்பு:

தமிழகத்தில் பழமையான சிலைகளைப் பதுக்கி வைத்திருந்து விற்பவர்கள் பற்றிய தகவல்கள் கடந்த ஒருவார காலமாக சேகரிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பல சிறப்பு படைகள் அமைக்கப்பட்டது. இந்த சிறப்படை அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 3 நாட்களாக விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் முகாமிட்டு சிலை கடத்தல் குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் கடந்த ஆறாம் தேதி ஏடிஎஸ்பி பாலமுருகன், ஆய்வாளர் வெங்கடேசன். உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் கண்ணன், பாண்டியன். காவலர் சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் தஞ்சாவூர் புதுக்குடி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

6 ஐம்பொன் சிலைகள் மீட்பு:

சோதனையின்போது,  சந்தேகப்படும்படியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சிறப்புப்படை போலீசார் சோதனை செய்தனர். அதில் பழமையான 3 அடி உயர திரிபுராந்தகர் சிலை, 2.75 அடி உயர வீணாதார தட்சிணாமூர்த்தி சிலை, 3.25 அடி உயர ரிஷபதேவர் சிலை, தலா 2.75 அடி உயர மூன்று அம்மன் சிலைகள் என ஆறு உலோக சிலைகள் இருந்தன. போலீசார் விசாரித்த போது, காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த சிலைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது:

தொடர்ந்து காரை ஓட்டி வந்த, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன்(42), மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(64) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  அதில், லட்சுமணன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டியுள்ளார். 

அப்போது இந்த 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. ஆனால் இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் சிலைகளை தன் வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார்.  இது குறித்து தனது நண்பர் ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்துள்ளார். பிறகு ராஜேஷ்கண்ணன் தனது நண்பரும், லட்சுமணனின் மருமகனுமான சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன்(39) சிலைகள் குறித்து தெரிவித்துள்ளார். பிறகு, ராஜேஷ் கண்ணன் திருமுருகனுடன், லட்சுமணன் வீட்டிற்கு வந்து சிலைகளை பார்த்துள்ளார். 

சிலைகளை விற்பனை செய்ய முயற்சி:

மூவரும் சேர்ந்து ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டனர்.  இதற்கிடையில், சமீபத்தில் ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு கடத்தவும் தொடர்பு கிடைத்துள்ளது. அதன்படி, ராஜேஷ் கண்ணனும், திருமுருகனும் கடந்த 5ம் தேதி நள்ளிரவு அவரது காரில் மயிலாடுதுறை கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்து, சிலைகளை எடுத்துக்கொண்டு  திருச்சி வழியாக சென்னை செல்வதற்காக வந்தகொண்டிருந்தபோது தான் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில்  அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  தொடர்ந்து மூன்று பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget