மேலும் அறிய

தஞ்சாவூரில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

புதியதாக போடப்பட்டு வரும் தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலையில் முதன் பலியாக மூன்று பேர் பலியானது குறிப்பிடத்தக்கது

தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில்-கும்பகோணம் பைபாஸ் கடகடப்பை பகுதியில் அதிகாலை 2 மணியளவில் சாலையின் சென்டர் மீடியனில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த மூன்று வாலிபர்கள் மீது கும்பகோணம் சென்ற லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தனர். தஞ்சை அருகே நாட்டாணியை சேர்ந்தவர் பிரசாத் (41). காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். மாரியம்மன் கோவில் மருங்கை கிராமத்தை சேர்ந்த சுதாகர் (27), அசூரமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் (32). இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  அதிகாலை பிரசாத், சுதாகர் ஆகியோர் காரிலும், பைக்கில் சந்திரசேகரும் தஞ்சை அடுத்த கடகடப்பை பகுதியில் புதிதாக போடப்பட்டு வரும் கும்பகோணம் பைபாஸ் சாலைக்கு சென்றனர்.


தஞ்சாவூரில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இவர்கள் மூன்று பேரும், ரிலாக்ஸ ஆன நாட்களில் ஆள் நடமாட்டம் இல்லாத புதிய பைபாஸ் சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இதே போல் மூன்று பேரும் அங்கு பைபாஸ் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்டர் மீடியனில் 3 பேரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி  கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீதும் மோதியது. மேலும் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மீதும் மோதியது.  

இந்த கோர விபத்தில் பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். கார், மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர்,  லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு விட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று விபத்தில் இறந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூரில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலை பணி பெரும்பாலான பகுதிகளில் முடிந்து விட்டதால், சாலையில் வாகனஙகள் வராது என்பதற்காக சாலை மற்றும் சென்டர் மீடியனில் பேசி கொண்டிருக்கின்றார்கள். சிலர் மது அருந்துகின்றார்கள். போலீசார் வாகன ரோந்து சென்று, இரவு நேரங்களில் நிற்பவர்களை அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும்.  புதியதாக போடப்பட்டு வரும் தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலையில் முதன் பலியாக மூன்று பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளையபேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (36) டாட்டா ஏசி டிரைவர். இவர் சுந்தரபெருமாள் கோயில்  பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற டூரிஸ்டர் வேன், டாட்டா ஏசி வாகனம் மீது மோதியது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  டூரிஸ்டர் வேனில் வந்த கும்பகோணம் செம்போடையை சேர்ந்த மணிகண்டன் (40), காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தப்பி ஓடிய டூரிஸ்ட் வேன் டிரைவரை சுவாமிமலை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் பகுதியில் இரு வேறு சாலை விபத்துக்களில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget