மேலும் அறிய

தஞ்சாவூரில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

புதியதாக போடப்பட்டு வரும் தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலையில் முதன் பலியாக மூன்று பேர் பலியானது குறிப்பிடத்தக்கது

தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில்-கும்பகோணம் பைபாஸ் கடகடப்பை பகுதியில் அதிகாலை 2 மணியளவில் சாலையின் சென்டர் மீடியனில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த மூன்று வாலிபர்கள் மீது கும்பகோணம் சென்ற லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தனர். தஞ்சை அருகே நாட்டாணியை சேர்ந்தவர் பிரசாத் (41). காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். மாரியம்மன் கோவில் மருங்கை கிராமத்தை சேர்ந்த சுதாகர் (27), அசூரமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் (32). இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  அதிகாலை பிரசாத், சுதாகர் ஆகியோர் காரிலும், பைக்கில் சந்திரசேகரும் தஞ்சை அடுத்த கடகடப்பை பகுதியில் புதிதாக போடப்பட்டு வரும் கும்பகோணம் பைபாஸ் சாலைக்கு சென்றனர்.


தஞ்சாவூரில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இவர்கள் மூன்று பேரும், ரிலாக்ஸ ஆன நாட்களில் ஆள் நடமாட்டம் இல்லாத புதிய பைபாஸ் சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இதே போல் மூன்று பேரும் அங்கு பைபாஸ் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்டர் மீடியனில் 3 பேரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி  கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீதும் மோதியது. மேலும் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மீதும் மோதியது.  

இந்த கோர விபத்தில் பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். கார், மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர்,  லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு விட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று விபத்தில் இறந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூரில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலை பணி பெரும்பாலான பகுதிகளில் முடிந்து விட்டதால், சாலையில் வாகனஙகள் வராது என்பதற்காக சாலை மற்றும் சென்டர் மீடியனில் பேசி கொண்டிருக்கின்றார்கள். சிலர் மது அருந்துகின்றார்கள். போலீசார் வாகன ரோந்து சென்று, இரவு நேரங்களில் நிற்பவர்களை அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும்.  புதியதாக போடப்பட்டு வரும் தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலையில் முதன் பலியாக மூன்று பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளையபேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (36) டாட்டா ஏசி டிரைவர். இவர் சுந்தரபெருமாள் கோயில்  பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற டூரிஸ்டர் வேன், டாட்டா ஏசி வாகனம் மீது மோதியது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  டூரிஸ்டர் வேனில் வந்த கும்பகோணம் செம்போடையை சேர்ந்த மணிகண்டன் (40), காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தப்பி ஓடிய டூரிஸ்ட் வேன் டிரைவரை சுவாமிமலை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் பகுதியில் இரு வேறு சாலை விபத்துக்களில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget