மேலும் அறிய

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் பயன் - தஞ்சை கலெக்டர் பெருமிதம்

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர் - கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை குறைக்க தொடங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1391 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, இதன்மூலம் 48,293 மாணவர்கள் பயனடைகின்றனர் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று பள்ளி கல்வி துறை சார்பில் 2022 -23ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கும் எண்ணும் எழுத்தும் என்ற முன்னோடி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.


எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் பயன் - தஞ்சை கலெக்டர் பெருமிதம்

வரும் 2022-23 கல்வி ஆண்டில் தொடங்கப்பட இருக்கும் இத்திட்டத்தின் இலக்கு 2025ல் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எழுத்தறிவு எண்ணறிவும் கிடைத்திட வேண்டும் என்பது குறிக்கோளாகும். அதற்கேற்ற வகையில் 1முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் செயல்களிலும் விளையாட்டு வழியிலும் குழந்தைகள் கற்றாலும் அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாகப் பிரித்து பாடங்களை கற்றுத் தருவது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளதாவது:

எண்ணும் எழுத்தும் திட்டம் ஒரு மகத்தான திட்டம் ஆகும். கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடக்க வகுப்புகளில் குறிப்பாக 1 முதல் 3ம் வகுப்பு குழந்தைகள் தங்கள் வகுப்பிற்குரிய கற்றல் நிலையை அடையவில்லை. எனவே குழந்தைகள் பெற்ற கற்றல் இழப்புகளை மீண்டும் பெறுவதற்கு உதவியாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் பயன் - தஞ்சை கலெக்டர் பெருமிதம்

தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முன்னோடித் திட்டம் எண்ணும் எழுத்தும் திட்டமாகும். எண்ணும் எழுத்தும் திட்டமானது 2022- 23ம் கல்வி ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1391 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 48,293 மாணவர்கள் பயனடைகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் 1919 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவத்திற்கான 11,898 ஆசிரியர்கள்கையேடு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 1,61,558 அரும்பு, மொட்டு மற்றும் மலர் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் செயல்பாடுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget