மேலும் அறிய

கடல்சார் வணிகம் வாயிலாக பழங்காலத்தில் தமிழர்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது - தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர்

தஞ்சாவூர்: பழங்காலத்தில் கடல்சார் வணிகம் மூலம் தமிழர்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்று இந்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் டி. தயாளன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையைச் சார்ந்த இந்தியப் பெருங்கடல் ஆய்வு மையம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியாவும், இந்தியப் பெருங்கடல் பாரம்பரியமும் என்கிற 3 நாள் கருத்தரங்கத் தொடக்க விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:

பழங்காலத்தில் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் தமிழ்நாடு நீண்ட காலமாக விரிவான கடல் வர்த்தக வலையமைப்பைக் கொண்டிருந்தது. அக்காலத்தில் பிற நாடுகளுடன் தமிழகம் மிகப் பெரும் கடல்சார் வர்த்தகம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக இத்தாலி, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள், தொலை கிழக்கு நாடுகளிலிருந்து கண்டறியப்பட்ட நாணயங்கள், வளையங்கள், கண்ணாடி பொருள்கள், மண்பாண்டங்கள் உள்ளிட்டவை உள்ளன.

தமிழ்நாட்டுடன் கடல்சார் வணிகத் தொடர்புடைய நாடுகளில் நம் நாட்டின் மண்பாண்டங்கள், கல்வெட்டுகள், மணிகள், சிலைகள் மற்றும் இதர பொருள்கள் காணப்படுகின்றன. இலங்கை, தாய்லாந்து, எகிப்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட முற்கால பானை ஓடுகளில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துகள் மூலம் தமிழகத்தின் பழங்கால கடல்சார் நடவடிக்கைகளை அறிய முடிகிறது.


கடல்சார் வணிகம் வாயிலாக பழங்காலத்தில் தமிழர்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது - தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர்

ஐநூற்றுவர், மணிக்கிராமம், நானாதேசி, அஞ்சுவண்ணம் உள்ளிட்ட தமிழகத்தின் வணிக சங்கங்கள், வணிகர்கள் கடல்சார் வணிகத்தில் மட்டுமல்லாமல் உள்நாட்டு வர்த்தகத்திலும் முக்கியப் பங்கு வகித்தனர். மேலும், வெளிநாடுகளில் சமய, மதச்சார்பற்ற அமைப்புகளை அமைப்பதிலும், ஆதரிப்பதிலும் ஈடுபட்டனர்.

தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், விரிவாக்கத்துக்கும் கடல்சார் வணிகம் முக்கியப் பங்கு வகித்தது. அது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் தமிழர்கள் காலனித்துவத்தையும் கொண்டிருந்தனர். மேலும், நமது கலை, பண்பாடு உள்ளிட்டவையும் அயல்நாடுகளுக்கு பரவியது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கருத்தரங்கத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் ஒய். சுப்பராயலு, எஸ். ராஜவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் வி. செல்வகுமார் வரவேற்றார். நிறைவாக, முனைவர் எஸ். கெüரிசங்கர் நன்றி கூறினார். சட்ட விழிப்புணர்வு முகாம் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல்கனி அவர்களின் வழிகாட்டுதலின் படி பொதுமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்   திருமண்டங்குடியில் நடைபெற்றது.

தன்னார்வ சட்ட பணியாளர் தனசேகரன் கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றம், சமரச மையம், சட்ட உதவி மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். பொதுமக்களின் சட்டம் சார்ந்த சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.  மேலும் சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் திருமண்டங்குடி ஊராட்சி செயலாளர் சண்முகம், மக்கள் நல பணியாளர் மருதவீரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget