இரண்டாவது நாளாக 3,500-ஐ கடந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 3 ஆயிரத்து 500-க்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 633, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேர் என 3 ஆயிரத்து 672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 80 ஆயிரத்து 56 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 3 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 3 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஆயிரத்து 335 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 55 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக இன்று 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 842 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8 லட்சத்து 66 ஆயிரத்து 913 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















