மேலும் அறிய

கரூரில் கர்ப்பப்பை நீர் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தவறாக செய்ததன் காரணமாகவே வளர்மதி உயிரிழந்துள்ளார் என்று கூறி, மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவரது உறவினர்கள் குவிந்தனர்.

கரூரில் இளம் பெண்ணிற்கு கர்ப்பப்பை நீர்க்கட்டியை அகற்ற தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 


கரூரில் கர்ப்பப்பை நீர் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் மணவாசி கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி (21). இவரது கணவர் பாலமுருகன். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. வளர்மதிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்ததால், அதனை அகற்றுவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஶ்ரீ ரத்தினா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சர்க்கரையின் அளவு சரிவர இல்லாததால், மேல் சிகிச்சைக்காக 5ம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கோவையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால், கரூர் ரத்தினா மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தவறாக செய்ததன் காரணமாகவே வளர்மதி உயிரிழந்துள்ளார் என்று கூறி, கரூரில் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.



கரூரில் கர்ப்பப்பை நீர் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

வளர்மதியின் பிரேதத்தை கோவையிலிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கரூர் எடுத்து வந்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே வளர்மதி உயிரிழந்தார். இதனால், வளர்மதியின் உடலை மீண்டும் கரூருக்கு கொண்டு வந்து, தனியார் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்த வளர்மதியின் உறவினர்கள் திட்டமிட்டனர். தகவல் அறிந்த போலீசார் வளர்மதி உடல் வந்த ஆம்புலன்ஸ் வேனை கரூர் - கோவை சாலை ரெட்டிபாளையத்தில் நிறுத்தி வைத்தனர்.


கரூரில் கர்ப்பப்பை நீர் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

இதனால், ஆத்திரத்தில் இருந்த வளர்மதியின் உறவினர்கள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையை மாலை முற்றுகையிட்டனர். அவர்களிடம், மருத்துவமனை சார்பில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிறகு, இது குறித்து புகார் கொடுத்ததால், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என வளர்மதியின் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதைஅடுத்து, போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். அதை தொடர்ந்து ரெட்டிபாளையத்தில் வளர்மதி உடலுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வேன், அவரின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றது.

அங்கு அவருக்கு இறுதிச் சடங்கு செய்தனர். இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையை விட்டுவிட்டு வளர்மதி இறந்தது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வளர்மதி இறந்ததற்கு சரியான ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்று வளர்மதியின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் தனியார் மருத்துவமனையில் இச்சம்பவம் அரங்கேறியது என்பது கரூர் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
BSNL IPL Special: BSNL ரசிகர்களாக மாறும் IPL ரசிகர்கள்.. ஆமாங்க, கொண்டுவந்துருக்கற பிளான் அப்படி...
BSNL ரசிகர்களாக மாறும் IPL ரசிகர்கள்.. ஆமாங்க, கொண்டுவந்துருக்கற பிளான் அப்படி...
TN Electricity Bill: தமிழக மக்களின் கஷ்டம் ஓவர்.. மாதந்தோறும் மின்சார கட்டணம் - எப்போது முதல் அமல் தெரியுமா? எவ்வளவு லாபம்?
TN Electricity Bill: தமிழக மக்களின் கஷ்டம் ஓவர்.. மாதந்தோறும் மின்சார கட்டணம் - எப்போது முதல் அமல் தெரியுமா? எவ்வளவு லாபம்?
NITHYANANDA: நான் செத்துட்டேனா? ஓடிவந்த நித்தியானந்தா - கைலாசாவில் இருந்து என்னெல்லாம் சொல்லி இருக்காரு?
NITHYANANDA: நான் செத்துட்டேனா? ஓடிவந்த நித்தியானந்தா - கைலாசாவில் இருந்து என்னெல்லாம் சொல்லி இருக்காரு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thadi Balaji on Vijay | ”தவெக 1st PROBLEM புஸ்ஸி என்ன தூக்கனாலும் பரவால்ல”உடைத்து பேசிய தாடி பாலாஜி | Vijay | Aadhav Arjuna | Bussy AnandEmpuraan | மோகன்லால், பிருத்விராஜ் படத்தை செருப்பால் அடித்த விவசாயிகள் மதுரையில் பரபரப்பு! | Mohanlal | Prithviraj | MaduraiVCK Cadre Fight | மிரட்டல்..கல்வீச்சு..அடிதடி..அத்துமீறிய விசிக பெண் நிர்வாகி பரபரப்பு காட்சிகள்EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
BSNL IPL Special: BSNL ரசிகர்களாக மாறும் IPL ரசிகர்கள்.. ஆமாங்க, கொண்டுவந்துருக்கற பிளான் அப்படி...
BSNL ரசிகர்களாக மாறும் IPL ரசிகர்கள்.. ஆமாங்க, கொண்டுவந்துருக்கற பிளான் அப்படி...
TN Electricity Bill: தமிழக மக்களின் கஷ்டம் ஓவர்.. மாதந்தோறும் மின்சார கட்டணம் - எப்போது முதல் அமல் தெரியுமா? எவ்வளவு லாபம்?
TN Electricity Bill: தமிழக மக்களின் கஷ்டம் ஓவர்.. மாதந்தோறும் மின்சார கட்டணம் - எப்போது முதல் அமல் தெரியுமா? எவ்வளவு லாபம்?
NITHYANANDA: நான் செத்துட்டேனா? ஓடிவந்த நித்தியானந்தா - கைலாசாவில் இருந்து என்னெல்லாம் சொல்லி இருக்காரு?
NITHYANANDA: நான் செத்துட்டேனா? ஓடிவந்த நித்தியானந்தா - கைலாசாவில் இருந்து என்னெல்லாம் சொல்லி இருக்காரு?
Trump Govt. Atrocity: ட்ரம்ப் நிர்வாகம் அட்ராசிட்டி.. ஒரே நாள்ல ஒரே துறைல 10,000 பேர் வேலை காலி.. எதுக்கு தெரியுமா.?
ட்ரம்ப் நிர்வாகம் அட்ராசிட்டி.. ஒரே நாள்ல ஒரே துறைல 10,000 பேர் வேலை காலி.. எதுக்கு தெரியுமா.?
TN Lake Man: தஞ்சையின் பெருமை.. தமிழ்நாட்டின் ஏரி மனிதன் - யார் இந்த நிமல் ராகவன்? ஊர் போற்றும் சாதனை..!
TN Lake Man: தஞ்சையின் பெருமை.. தமிழ்நாட்டின் ஏரி மனிதன் - யார் இந்த நிமல் ராகவன்? ஊர் போற்றும் சாதனை..!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
Embed widget