மேலும் அறிய

கரூர் : பெரியதாதம் பாளையம் ஏரிக்கு எப்போது விடிவுகாலம்?

ஒரு காலகட்டத்தில் கடல் போல் காட்சி அளித்த பெரியதாதம் பாளையம் ஏரி தற்போது சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடு போல காட்சி அளிக்கிறது.

கரூர் மாவட்டம் என்றாலே தண்ணீர் பஞ்சம் உள்ள மாவட்டம்தான். இதனை போக்கும் விதமாக முந்தைய காலகட்டத்தில் அமராவதி ஆற்றில் இருந்து உபரிநீர்கலை ஏரிகள் மூலம் நிரப்பி நிலத்தடி நீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான பெரியதாதம் பாளையம் ஏரி சுமார் 420 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள ஏரி. இந்நிலையில் தற்போது ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில் அந்த ஏரியின் அளவு 360 ஏக்கர் பரப்பளவு சுருங்கி உள்ளது. இந்த ஏரியை காக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஏரியில் பணிகளை முதலில் செய்வதாக வாக்குறுதி அளித்து அதைத் தொடர்ந்து, அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடிவரும் பொதுமக்களுக்கு இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் அந்தப் பகுதி விவசாய சங்கங்களும் பல்வேறு கட்சிகளும் இதற்காக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் மனு வழங்கியும் எந்த பயனும் இல்லாத நிலையிலேயே பெரியதாதம் பாளையம் ஏரி தற்போது காட்சி அளிக்கிறது.


கரூர் : பெரியதாதம் பாளையம் ஏரிக்கு எப்போது விடிவுகாலம்?

பெரியதாதம் பாளையம் பழைய ஏரியின் வரலாறு

அமராவதி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வரும் காலத்தில் நீரை சேமித்து வைக்கவேண்டி அணைப்பாளையம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் மூலம் 3,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நிலையில் மழைக்காலங்களில் ராஜா வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் வாய்க்காலை உடைத்துக்கொண்டு விவசாய நிலங்களில் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் மாற்று ஏற்பாடாக 1881ல் கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பெரியதாதம் பாளத்தில் 420 ஏக்கர் பரப்பளவில் ஏரியை உருவாக்கி அதனில் அமராவதி ஆற்று உபரிநீரைச் சேமித்து வைத்தனர்.

இந்த நீர், வறட்சி காலங்களில் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள நீர் போக்கி மூலம் வெளியேற்றப்பட்டு, கரூர் நகர உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் , குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் ஏரிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. அதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் ஏரியில் நீர் வரத்து பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகளாக மாற்றப்பட்டது. இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் குறைந்து தற்போது ஏறி முழுவதும் வற்றிப்போய் உள்ளது. இதனால் கரூர் மற்றும் க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரு காலகட்டத்தில் கடல் போல் காட்சி அளித்த பெரியதாதம் பாளையம் ஏரி தற்போது சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடு போல காட்சி அளிக்கிறது. இந்நிலையில் பெரியதாதம் பாளையம் ஏரிக்கு அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.


கரூர் : பெரியதாதம் பாளையம் ஏரிக்கு எப்போது விடிவுகாலம்?

இது குறித்து விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், பெரியதாதம் பாளையம் ஏரிக்கு 1950ம் ஆண்டு அணைப்பாளையத்திலிருந்து  தொட்டிவாடி ,எருமைப்பட்டி புதூர், வழியாகத் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பிறகு பெரியதாதம் பாளையம் ஏரி 1970ல் பொதுப்பணித்துறை துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இறுதியாக கடந்த 2002ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் மதிப்பில் அமராவதி ஆற்று நஞ்சைத் தலையூர், முட்டணையிலிருந்து பெரியதாதம் பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர போடப்பட்ட திட்டமும், கிடப்பில் உள்ளது. அமராவதி வெள்ள உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் சின்னமுத்தம்பாளையம் குளம், ஆரியூர் குளம், நல்லி செல்லிபாளையம் குளங்களில் தண்ணீர் தேங்கும் இதனால் 75க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனக் கூறினார். 


கரூர் : பெரியதாதம் பாளையம் ஏரிக்கு எப்போது விடிவுகாலம்?

கரூர் மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான பெரியதாதம் பாளையம் ஏரியைக் காப்பாற்ற யாராவது முன்வருவார்களா என்று அப்பகுதி விவசாய பெருமக்கள் ஏங்கித்தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hailstorm: ஆலங்கட்டி மழையால் குளிர்ந்த தமிழகம்! பட்டு..பட்டுனு விழுந்த கட்டியால் மகிழ்ச்சியில் மக்கள் - எங்கெல்லாம் பெய்தது தெரியுமா?
ஆலங்கட்டி மழையால் குளிர்ந்த தமிழகம்! பட்டு..பட்டுனு விழுந்த கட்டியால் மகிழ்ச்சியில் மக்கள் - எங்கெல்லாம் பெய்தது தெரியுமா?
'ஐ.நாவில் பண்ரூட்டி’ கவனம் ஈர்த்த அஸ்வத்தாமன் உரை..!
'ஐ.நாவில் பண்ரூட்டி’ கவனம் ஈர்த்த அஸ்வத்தாமன் உரை..!
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
திமுக - கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி !! சண்முகம் பரபரப்பு பேட்டி
திமுக - கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி !! சண்முகம் பரபரப்பு பேட்டி
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்
MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
DMK Alliance CPM : 6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Trump Eyes on Cuba: அடுத்த டார்கெட் ஃபிக்ஸ்; கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப்; எவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டார் பாருங்க
அடுத்த டார்கெட் ஃபிக்ஸ்; கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப்; எவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டார் பாருங்க
திமுக - கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி !! சண்முகம் பரபரப்பு பேட்டி
திமுக - கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி !! சண்முகம் பரபரப்பு பேட்டி
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Embed widget