மேலும் அறிய

அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 வரை தமிழகத்தில் கல்வியின் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஏற்படுத்தியது - இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் 2030 ஆண்டில் 52 சதவீதமாக அடைய வேண்டிய இலக்கை 2020க்குள் கொண்டு வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் பெருமிதம் தெரிவித்தார்.

சேலம் மாநகர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மூவேந்தர் அரங்கத்தில் தனியார் கல்வி அறக்கட்டளை மற்றும் தனியார் தொலைக்காட்சி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதைதொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,  மாணவர்கள் செல்வங்கள் கடினமான கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை கல்வியில் தமிழகத்தில் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது தான் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது என்று கூறினார்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 வரை தமிழகத்தில் கல்வியின் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஏற்படுத்தியது - இபிஎஸ்

ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என பல பள்ளிகளை உருவாக்கி சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் கூட கல்வி கற்பவர்களான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு மாணவ மாணவிகளுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள், ஏழு சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் என பல கல்லூரிகள் உருவாக்கியதன் மூலமாக ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் கூட குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது உயர் கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 32 சதவீதமாக இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக அரசு தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி, மற்ற துறைகளை காட்டிலும், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்ற பெருமை பெற்றது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 வரை தமிழகத்தில் கல்வியின் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஏற்படுத்தியது - இபிஎஸ்

குறிப்பாக 2030 ஆம் ஆண்டில் உயர்கல்வி படிப்பவர்களின் இலக்கை 2019-20-ல் அடைந்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார். 2019-20 ஆம் ஆண்டுக்குள் 52 சதவீதம் உயர் கல்வி படிப்புக்குள் சதவீதமாக உயர்த்தப்பட்டது. கல்வியில் மறுமலர்ச்சி, புரட்சி உருவாக்கி தமிழகத்திலேயே உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்த்தியது. சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் கூட எளிதாக உயர்கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை அதிமுக உருவாக்கி கொடுத்ததாக பெருமிதம் தெரிவித்தார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவக் படிப்பு, பல் மருத்துவ படிப்பு எட்டாக கனியாக இருந்தது. தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 41 சதவீதம் உள்ளன. 2016-17 ஆம் ஆண்டு வெறும் 9 பேர் மட்டும் தான் மருத்துவக் கல்லூரி சேர்ந்து படித்து வந்தனர். மூன்று லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் வெறும் ஒன்பது பேர் மட்டும் தான் நீட்தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பை படித்து வந்தனர். இதனை கவனத்தில் கொண்டு செயல்பட்டு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Embed widget