மேலும் அறிய

சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கிற வகையில் மக்களுடன் சேர்ந்து போராடுவோம்.

 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ”பெரியாருக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுகின்றன. விசிக அதை வன்மையாக கண்டிக்கிறது. பெரியார் சனாதனத்தை எதிர்ப்பதில் அம்பேத்கருடன் கைகோர்த்து நின்றார். அம்பேத்கரையும் பெரியாரையும் எதிரெதிர் துருவங்களில் நிறுத்த முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது. அதிர்ச்சியாக உள்ளது. அகில இந்திய அளவில் பெரியாரை அடையாளம் கண்டு போற்றியவர் அம்பேத்கர். அதேபொல் அம்பேத்கரை கருத்தியல் அடிப்படையில் ஊக்கப்படுத்தியவர் துணையாக நின்றவர் தந்தை பெரியார்.

இருவரும் சனாதன எதிர்ப்பில் பார்ப்பனிய பணியா ஆதிக்க எதிர்ப்பில் ஒரே புள்ளியில் நின்றவர்கள். அவர்களுக்குள்ளே வேறுபாட்டை உருவாக்குவதற்கு அவர்களை பின்பற்றக்கூடிய தோழர்களுக்கு இடையே இடைவெளியை உருவாக்குவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. அது எடுபடாது.

பெரியாருக்கு எதிராக விமர்சனம் செய்தால் அது அம்பேத்கருக்கு எதிராகவே செய்யப்படும் விமர்சனமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி பார்க்கிறது. அதை ஒரு போதும் வேடிக்கை பார்க்க மாட்டோம்.

வேங்கை வயல் பிரச்சினையில் சிபிசிஐடி விசாரணை ஏமாற்றம் அளிக்கிறது. சிறப்பு புலாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களின்மீதே இவர்கள்தான் கலந்தார்கள் என சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசுக்கு விசிக கோரிக்கை விடுக்கிறது. இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் இடுபட்ட வேங்கை வயல் மக்களும் விசிக தோழர்களையும் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் சமூக நீதியின்பக்கம் திமுக நிற்கும் என்ற நம்பிக்கை இன்னும் எங்களுக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இந்த அரசு இருக்கும் என நம்புகிறோம்.

காவல்துறையினரின் இந்த போக்கை சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கிற குற்றப்பத்திரிகையை தமிழக அரசு ஏற்க கூடாது என விசிக கோருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கிற வகையில் மக்களுடன் சேர்ந்து போராடுவோம்.

சீமானின் போக்கு கவலையளிக்கிறது. வேதனையாக இருக்கிறது. அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் எனத் தெரியவில்லை. அவரை யார் இப்படி உசுப்பி விடுகிறார்கள் எனத் தெரியவில்லை. அவரின் போக்கு தமிழக மக்களின் எண்ணங்களுக்கு நேர் எதிராக பேசுகிறார். அவரின் அரசியல் அவருக்கும் நல்லதல்ல. தமிழ்நாட்டின் மக்களுக்கும் நல்லதல்ல. அவரை பின்பற்றும் தோழர்கள் கவனமாக அணுக வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

சீமான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அனைத்தையும் அணுகிறார். 100 விழுக்காடு குதர்க்கமாகவே இருக்கிறது. அதில் எந்தவித ஜனநாயகமும் இல்லை.

வேங்கை வயல் விவகாரத்தை வாக்கு அரசியலாக பார்க்கவில்லை. தொடக்கத்திலிருந்தே காவல்துறையினர் இந்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். அதனால்தான் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சிபிசிஐடி விசாரணை கோரினோம்.

இப்போதும் அதேதான் நடந்துள்ளது. சிபிசிஐடியும் பட்டியல் இனத்தவரை ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். அதையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ 100 விழுக்காடு நேர்மையாக விசாரிக்க கூடும் என நம்புகிற நிலை இப்போது இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லை என சிபிஐ விசாரணை கேட்கிறோம். காவல்துறை மீது நம்பிக்கை இழந்ததால் சிபிஐ கேட்கிறோம்.

காவல்துறையை பொறுத்தவரை ஒரு தலித் புகார் கொடுத்தால் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் தலித்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். இதற்கு முதலமைச்சரோ, அமைச்சர்களோ பொறுப்பேற்க முடியாது. நாங்கள் போராட்டம் நடத்தினால் தான் ஒரு புகார் கூட காவல்துறை ஏற்றுக்கொள்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget