மேலும் அறிய

67 லட்சம்.. இது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து அரசுப்பணிக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 67.76 லட்சமாக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து அரசுப் பணிக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 67.76 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 58 வயதைக் கடந்துவிட்டனர் என்பது வேதனை தரும் உண்மை. படித்து முடித்தவுடன் ஒரு வேலை வேண்டும். இதுதான் கல்வி பயில்பவர்கள் அனைவரின் ஆசையும் கூட. தமிழகத்தில் இளைஞர்களின் அரசாங்க வேலைவாய்ப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4, குரூப் 8 எனப் பல்வேறு தேர்வுகளை நடத்துகிறது. ஆனால், எல்லோருக்குமே போட்டித் தேர்வை எதிர்கொள்ளமுடியாது. அதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்வோருக்கு அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் கல்வித் தகுதி அடிப்படையிலும் நேரடி நியமனங்களை வழங்குகிறது.

அதன் காரணமாகவே 10 ஆம் வகுப்பு தொடங்கி பட்டப்படிப்பு வரை தங்களின் கல்வித் தகுதியை மக்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிடுகின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசுப்பணிக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 67.76 லட்சமாக அதிகரித்துள்ளது.  இவர்களில் 24 வயது முதல் 35 வயது கொண்டவர்களே அதிகமாக உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 24.88 லட்சம் என்றளவில் இருக்கிரது.

இரண்டாவது இடத்தில் 19 வயது முதல் 23 வயதுடையவர்கள் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் இன்னும் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. இவர்களின் எண்ணிக்கை 16.49 லட்சம் என்றளவில் உள்ளது. அடுத்ததாக 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள். இவர்களின் எண்ணிக்கை 14.01 லட்சம் என்றுள்ளது.

இந்தப் பட்டியலில் 36 முதல் 57 வயது வரை 12.26 லட்சம் பேர் முதிர்வு பெற்ற பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பணியில் இருப்போரின் ஓய்வு வயது 58ல் இருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் 58 ஆக குறைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரில் 58 வயதைக் கடந்தோரின் எண்ணிக்கை 10,907 என்றளவில் இருக்கிறது. 60 வயதே ஓய்வு வயது என்ற நம்பிக்கையில் இவர்களில் பலரும் தங்களின் பணிக்கான விண்ணப்பத்தைப் புதுப்பித்துள்ளனர்.
மொத்தமாக தமிழகம் முழுவதும் 67 லட்சத்து 76 ஆயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தைந்து பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

கலை, அறிவியல் படிப்பு, வணிகம், பொறியியல் படிப்பு, வேளாண்மை உள்ளிட்டப் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்ற 9.34 லட்சம் பேரும் அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பணிக்காக 5 லட்சம் பேர் காத்திருப்பு:

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் பட்டய தேர்வை முடித்திருக்க வேண்டும். உயர்நிலை ஆசிரியர்கள் இளங்கலை பட்டத்துடன் ஆசிரியர் கல்வியும், மேல்நிலை வகுப்பெடுப்பவர்கள் முதுகலை பட்டத்துடன் ஆசிரியர் கல்வியும் நிறைவு செய்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்த 1,70,243 பேரும், இளங்கலை பட்டத்துடன் பிஎட் முடித்தவர்கள் 85,310 பேரும், முதுகலை பட்டத்துடன் பிஎட்/எம்எட் முடித்தவர்கள் 2,42,711 பேரும் என மொத்தம் 4,98,264 பேர் அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget