மேலும் அறிய

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தென் மண்டல் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உரிய அனுமதியின்றி சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் மேற்கொள்வதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதன் கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை:

கேரள அரசானது , சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, நாளிதழில் வெளியான செய்திகள் அடிப்படையில், தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது.

அதையடுத்து, இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில், கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கலிங்குதான் கட்டுகிறோம். இதை தடுப்பணைகளை போன்று எடுத்து கொள்ள கூடாது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

கட்டுமான பணிகளுக்கு தடை:

இந்நிலையில், எந்த கட்டுமான பணியாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்றுதான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உரிய அனுமதி பெற்றிருந்தால், அதை அறிக்கையாகவும் சமர்பிக்கவும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வழக்கை, ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிடப்பட்டுள்ளது. 

சிலந்தி ஆறு:

சிலந்தி ஆறு என்பது தேனாரின் துணை நதியாகும். இது மூணாரின் மேற்கு சரிவு பகுதிகளில் உற்பத்தியாகி, அமராவதி ஆற்றில் கலக்கிறது. அமராவதி ஆற்றில் கலக்கும் இந்த சிலந்தி ஆற்றின் நீர் சுமார் 222 கிமீ பயணித்து கரூர் மாவட்டம் மாயனூர் அருகே திருமுக்கூடலில் காவிரி ஆற்றில் கலக்கிறது. 

இந்தநிலையில், சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்படுவதால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 55,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கிய ஆதாரமான உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து தடைபடும் என்று கூறி தமிழ்நாடு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் விவசாயிகள். மேலும், அணையை மூடக்கோரி திருப்பூர் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். 

”காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

பழனி மலைத் தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடைப்பட்ட மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில்  உருவாகும் அமராவதி ஆறு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பாய்ந்து, 55,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழ்கிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அமராவதி அணையில் இருந்தும், ஆற்றில் இருந்தும் ஏராளமான பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அமராவதி ஆற்றுக்கு   பாம்பாறு, சிலந்தி ஆறு, தேவாறு, சின்னாறு ஆகிய துணை ஆறுகள் உள்ளன. இவற்றில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை கேரள அரசு கட்டி வருவது தான் சிக்கலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

முதலமைச்சர் கடிதம்:

இதற்கு முன்பு முதலமைசச்ர் ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வதா? தவெக தலைவர் விஜய் மீது எம்பி திருமாவளவன் விமர்சனம்!
ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வதா? தவெக தலைவர் விஜய் மீது எம்பி திருமாவளவன் விமர்சனம்!
வெப்ப அலையை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு: என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?
வெப்ப அலையை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு: என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?
Breaking News LIVE 28th OCT: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து.
Breaking News LIVE 28th OCT: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து.
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Maanadu Issue உடைந்து கிடக்கும் நாற்காலிகள்குப்பைக் கூளமான மாநாடு திடல் விளாசும் உள்ளூர் மக்கள்Anjalai Ammal Profile : தென்னிந்தியாவின் ஜான்சிராணி தவெக போற்றும் சிங்கப்பெண் அஞ்சலை அம்மாள்?TVK Maanadu Vijay Speech | பெயர் சொல்ல பயந்தாரா விஜய்? ஒளிஞ்சு விளையாடியது ஏன்?Sellur Raju  | செல்லூர் ராஜூ-வின் கோரிக்கை அதிரடி காட்டிய PTR, KN.நேரு, ஒரே இரவில் நடந்த மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வதா? தவெக தலைவர் விஜய் மீது எம்பி திருமாவளவன் விமர்சனம்!
ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வதா? தவெக தலைவர் விஜய் மீது எம்பி திருமாவளவன் விமர்சனம்!
வெப்ப அலையை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு: என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?
வெப்ப அலையை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு: என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?
Breaking News LIVE 28th OCT: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து.
Breaking News LIVE 28th OCT: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து.
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த முதல்வரின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த முதல்வரின் கடிதம்!
Diwali 2024 ; மதுரையில் தீபாவளி விற்பனை களைகட்டியது அதன் சிறப்பு ஆல்பம் !
Diwali 2024 ; மதுரையில் தீபாவளி விற்பனை களைகட்டியது அதன் சிறப்பு ஆல்பம் !
'சாதி பேர வச்சி திட்றாங்க சார்' பேரூராட்சி தலைவரை மாற்ற கோரி நம்பிக்கை இல்ல தீர்மானம்... விழுப்புரத்தில் பரபரப்பு
'சாதி பேர வச்சி திட்றாங்க சார்' பேரூராட்சி தலைவரை மாற்ற கோரி நம்பிக்கை இல்ல தீர்மானம்... விழுப்புரத்தில் பரபரப்பு
TNPSC Group 4 Result: எவ்வளவு வேகம்? 92 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி பெருமிதம்!
TNPSC Group 4 Result: எவ்வளவு வேகம்? 92 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி பெருமிதம்!
Embed widget