மேலும் அறிய

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தென் மண்டல் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உரிய அனுமதியின்றி சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் மேற்கொள்வதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதன் கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை:

கேரள அரசானது , சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, நாளிதழில் வெளியான செய்திகள் அடிப்படையில், தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது.

அதையடுத்து, இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில், கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கலிங்குதான் கட்டுகிறோம். இதை தடுப்பணைகளை போன்று எடுத்து கொள்ள கூடாது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

கட்டுமான பணிகளுக்கு தடை:

இந்நிலையில், எந்த கட்டுமான பணியாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்றுதான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உரிய அனுமதி பெற்றிருந்தால், அதை அறிக்கையாகவும் சமர்பிக்கவும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வழக்கை, ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிடப்பட்டுள்ளது. 

சிலந்தி ஆறு:

சிலந்தி ஆறு என்பது தேனாரின் துணை நதியாகும். இது மூணாரின் மேற்கு சரிவு பகுதிகளில் உற்பத்தியாகி, அமராவதி ஆற்றில் கலக்கிறது. அமராவதி ஆற்றில் கலக்கும் இந்த சிலந்தி ஆற்றின் நீர் சுமார் 222 கிமீ பயணித்து கரூர் மாவட்டம் மாயனூர் அருகே திருமுக்கூடலில் காவிரி ஆற்றில் கலக்கிறது. 

இந்தநிலையில், சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்படுவதால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 55,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கிய ஆதாரமான உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து தடைபடும் என்று கூறி தமிழ்நாடு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் விவசாயிகள். மேலும், அணையை மூடக்கோரி திருப்பூர் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். 

”காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

பழனி மலைத் தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடைப்பட்ட மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில்  உருவாகும் அமராவதி ஆறு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பாய்ந்து, 55,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழ்கிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அமராவதி அணையில் இருந்தும், ஆற்றில் இருந்தும் ஏராளமான பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அமராவதி ஆற்றுக்கு   பாம்பாறு, சிலந்தி ஆறு, தேவாறு, சின்னாறு ஆகிய துணை ஆறுகள் உள்ளன. இவற்றில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை கேரள அரசு கட்டி வருவது தான் சிக்கலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

முதலமைச்சர் கடிதம்:

இதற்கு முன்பு முதலமைசச்ர் ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  ஆட்சியர் அறிவிப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  ஆட்சியர் அறிவிப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Embed widget