மேலும் அறிய

Stalin Condemns: “தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்

காஷ்மீரில், அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா நடத்தப்பட்ட விதத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக சாடியுள்ளார்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பான நிலையில், இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசையும் சாடியுள்ளார்.

முதலமைச்சரின் கண்டனப் பதிவு என்ன.?

இது குறித்து, உமர் அப்துல்லாவின் பதிவை மேற்கோள் காட்டி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நேரத்தில், அங்கு நடக்கும் தற்போதைய நிகழ்வுகள், நிலைமை எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதை நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளார்.

அங்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உமர் அப்துல்லா, 1931 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, அதற்காக சுவர்களில் ஏறிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இது, ஒரு மாநிலம் அல்லது ஒரு தலைவரைப் பற்றியது மட்டுமல்ல, தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை, மத்திய பாஜக அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து வருகிறது எனவும், இது காஷ்மீரில் நடக்க முடிந்தால், அது எங்கும் நடக்கலாம், எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கும் நடக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதோடு, ஒவ்வொரு ஜனநாயகக் குரலும் இதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர டி. ராஜவும் கண்டனப் பதிவு

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜாவும், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு & காஷ்மீரில், துணைநிலை ஆளுநர் நிர்வாகமும், ஜம்மு & காஷ்மீர் காவல்துறையும், தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை தடுத்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.

மேலும், உமர் அப்துல்லா ஜூலை 13 அன்று தியாகிகளின் கல்லறையில் அஞ்சலி செலுத்த, குடிமக்கள் மற்றும் தலைவர்களுடன் சேர்ந்து சென்ற அவர்களை கைது செய்து, துன்புறுத்தியது ஏற்கமுடியாதது என்றும் கூறியுள்ளார். இந்த அவமானத்துடன் சேர்த்து, ஏராளமான தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர் என்றும், கூட்டு நினைவு நாளில் அவர்களின் சொந்த வீடுகளுக்குள் அவர்கள் அமைதியாக வைக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோதமான எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது ஜனநாயக விதிமுறைகளை மீறுவது மட்டுமல்ல, இது நமது மனசாட்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி எவ்வளவு தூரம் சர்வாதிகார, பொறுப்பற்ற ஆட்சியின் கீழ் விழுந்துள்ளது என்பதற்கான நினைவூட்டல் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Taliban Warns Pakistan: ‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Taliban Warns Pakistan: ‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
EPS:
EPS: "என்ன பூச்சாண்டி காட்டினாலும் எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டான்.." இபிஎஸ் ஆவேசம்
Embed widget