மேலும் அறிய

TN Bus Strike: நீதிபதி தந்த அட்வைஸ்! ஸ்டிரைக்கை தற்காலிகமாக திரும்ப பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்!

தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

TN Bus Strike: தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்:

ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை விடுவிப்பு, பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  திங்கட்கிழமை நள்ளிரவில் தொடங்கிய வேலை நிறுத்தம் இன்று வரை நடைபெற்றது.

கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. தொழிற்சங்கங்கள் சொன்ன 6 கோரிக்கைகள் 2 கோரிக்கைகளை மட்டுமே தற்போதைக்கு பரீசிலிக்க முடியும். மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஏற்கப்படவில்லை. 

இதனால் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொமுச மற்றும் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை.  இதனால் அந்த சங்க ஊழியர்களை கொண்டும், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கொண்டும் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டது. 

 உயர்நீதிமன்றத்தில் வழக்கு:

இதனிடையே, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. - இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, "பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது தேவையற்றது.

ஆனால் போராட்டம் நடத்த உரிமையுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கலின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? நகரங்களில் மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்னை உள்ளது?” என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து அரசு பிற்பகலுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர். 

போராட்டம் தற்காலிக வாபஸ்:

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஸ்ட்ரைக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க தலைமை நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சர் சிவசங்கர் சொல்வது என்ன?

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதற்கு வரவேற்கிறேன்.  முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரி 19ஆம்  தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Alert: அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
Top 10 News Headlines: 3 மாவட்டங்களில் இன்று கனமழை, பிரதமர் மோடி உறுதி, பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான் - 11 மணி செய்திகள்
3 மாவட்டங்களில் இன்று கனமழை, பிரதமர் மோடி உறுதி, பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான் - 11 மணி செய்திகள்
Farmers: காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.!  கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.! கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Digital Gold SEBI Warning: டிஜிட்டல் தங்கத்துல முதலீடு செய்யப் போறீங்களா.? உஷாரா இருங்க.! எச்சரிக்கும் SEBI
டிஜிட்டல் தங்கத்துல முதலீடு செய்யப் போறீங்களா.? உஷாரா இருங்க.! எச்சரிக்கும் SEBI
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Alert: அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
Top 10 News Headlines: 3 மாவட்டங்களில் இன்று கனமழை, பிரதமர் மோடி உறுதி, பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான் - 11 மணி செய்திகள்
3 மாவட்டங்களில் இன்று கனமழை, பிரதமர் மோடி உறுதி, பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான் - 11 மணி செய்திகள்
Farmers: காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.!  கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.! கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Digital Gold SEBI Warning: டிஜிட்டல் தங்கத்துல முதலீடு செய்யப் போறீங்களா.? உஷாரா இருங்க.! எச்சரிக்கும் SEBI
டிஜிட்டல் தங்கத்துல முதலீடு செய்யப் போறீங்களா.? உஷாரா இருங்க.! எச்சரிக்கும் SEBI
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Taliban Warns Pakistan: ‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
Air Hoestess: 90 நொடிகள் தான்.. விமான பணிப்பெண்கள் செய்ய வேண்டிய மேஜிக்.. இல்லைன்னா வேலை காலி
Embed widget