TN Assembly Session LIVE: "அதிமுகவை பகைவராக நினைக்கவில்லை” - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு
TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் கூட்டம் நிகழ்வுகள் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாகில் காணலாம்.
LIVE

Background
TN Assembly Session LIVE: "அதிமுகவை பகைவராக நினைக்கவில்லை” - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு
அதிமுகவை நாங்கள் பகைவராக நினைக்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு சட்டப்பேரவையில் பேசி இருக்கிறார்
அயோத்தியா மண்டப விவகாரத்தில் அரசியலை புகுத்த நினைத்தால் அது நடக்காது - முதலமைச்சர்
அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்
”சாமானிய மக்கள் பிரச்சனையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின்
சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட சாமானிய மக்கள் பிரச்சனையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார்
நீட் தேர்வின் மறுவடிவமே க்யூட்: ஜி.கே.மணி காட்டம்
முதலமைச்சரின் தீர்மானத்தை ஆதரித்துப் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி சட்டப்பேரவையில் பேசும்போது, ''ஏழை, நடுத்தர மக்களின் கல்வியைக் காக்கும் தீர்மானம்.
க்யூட் தேர்வு எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் வரும் என்று அச்சப்படுகிறோம். ஏழைகளுக்கு எட்டாக் கனியாக உள்ள நீட் தேர்வின் மறுவடிவமே க்யூட். ஏழை மாணவர்கள் கல்லூரி இளங்கலைப் படிப்புகளில் சேரப் போடப்படும் முட்டுக்கட்டையே க்யூட். தனியார் பயிற்சி மையங்களின் வணிகத்தை ஆதரிக்கவே இந்தத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது'' என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
மாநில உரிமைகள் மீது மத்திய அரசு துல்லியத் தாக்குதல்: ஜவாஹிருல்லா வேதனை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா சட்டப்பேரவையில் பேசும்போது, ''மாநிலங்களின் உரிமைகள் மீது மத்திய அரசு துல்லியத் தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கியமாகக் கல்வித்துறையில் தமிழ்நாட்டை மையமாக வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, கிராமப்புற மக்கள் தமிழகத்தில் கல்வியில் முன்னேற்றம் பெற்றுள்ளார்கள். ஏனெனில் அப்போதெல்லாம் நீட், க்யூட் ஆகிய தேர்வுகள் கிடையாது. இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுழைவுத் தேர்வு மோசமானது'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

