மேலும் அறிய

TN Assembly: ஜனவரி 13 ஆம் தேதி வரை சட்டப்பேரவை; ஆளுநர் உரைக்கு உரிமையை உருவாக்கியது அம்பேத்கர்: அப்பாவு ஆவேசம்

நடப்பாண்டுக்கான தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று தொடங்கியது.

ஜனவரி 13 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

நடப்பாண்டுக்கான தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று தொடங்கியது. அவர் தன் உரையில் பல வார்த்தைகளை விடுத்து பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை தமிழில் மொழிப்பெயர்த்து பேசினார். இதனையடுத்து இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே  ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதன் பின்னர் ஆளுநர் உரை குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அச்சிடப்பட்ட உரையை முறையாக முழுமையாக ஆளுநர் படிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் அச்சிட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என தீர்மானத்தினை முன்மொழிய சட்டப்பேரவையில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

ஜனவரி 13 ஆம் தேதி வரை நடைபெறும் 

இதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்ன செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, ஜனவரி 13 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவித்தார். 

மேலும் நாளை சட்டப்பேரவை கூட்டம் கூடியதும் சமீபத்தில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். அதன்பின் 11, 12 ஆம் தேதிகளில் சட்டப்பேரவை முழுமையாக நடைபெறும். 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் கூட்டத்தொடர் முடிவடையும் என அப்பாவு தெரிவித்துள்ளார். 

ஆளுநர் செயல்பாடு வருத்தமளிக்கிறது

“கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ஆங்கிலத்தில் ஆளுநர் உரை அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு  7 ஆம் தேதி எங்களுக்கு அனுப்பப்பட்டது.  இன்று ஆளுநர் தனது உரையின் சில பகுதிகளை விட்டு விட்டும், சில பகுதிகளை சேர்த்தும் பேசினார்.  அதனால் அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றிருந்ததை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற வேண்டும் என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அதேபோல் ஆளுநர் தேசிய கீதம் முடிவடைதற்கு முன்பே சென்று விட்டார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் உரைக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். ஆனால் அவருடைய பெயரைக் கூட ஆளுநர் உச்சரிக்காதது வேதனையாக உள்ளது. மேலும் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் மாநிலத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள் என தெரியவில்லை. ஆளுநர் உரை ஜனநாயக மரப்புப்படியே நடக்கிறது. அவர்கள் உரையின் மீது எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல், இப்படி பொதுமேடையில் பேசுவது போன்றுவது பேசினால் சரியா?” என அப்பாவு கேள்வியெழுப்பினார்.

”இந்திய நாடாளுமன்றத்தின் மரபுப்படியே நாம் நடக்கிறோம். மோடி அரசால் நிறைவேற்றப்படுகின்ற சட்டத்திற்கு குடியரசு தலைவர் அடுத்த நொடியே ஒப்புதல் அளிக்கிறார். ஆனால் பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து சட்ட தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் இதுவரை எந்த பதிலும் இல்லை. 

எனக்கு ஆளுநர் அவர்களின் செயல்பாடு மனவருத்தம் அளிக்கிறது. ஆளுநராக இருப்பவர்கள் மத்திய அரசை திருப்திபடுத்தினால் பெரிய பதவி கிடைக்குமோ என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. தேசிய கீதத்துக்கு ஆளுநர் மரியாதை கொடுக்காதது இந்த நாட்டை அவமானப்படுத்துவதற்கு சமமானதாகும்” என சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். 
 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget