மேலும் அறிய

Thevar Jayanthi LIVE: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மதிமுக சார்பில் மரியாதை

Thevar Jayanthi Guru Poojai LIVE: குரு பூஜை விழாவில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LIVE

Key Events
Thevar Jayanthi LIVE: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மதிமுக சார்பில் மரியாதை

Background

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது.இதையொட்டி, அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த பசும்பொன் விரைகின்றனர். ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக , இன்றைய குரு பூஜை விழாவில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிளக்ஸ் போர்டுகள்/பேனர்கள் வைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்தள்ளது.     

 

 

தேவரின் ஆன்மீக வாழ்க்கையை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் தேவர் நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு  முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 59 ஆவது குரு பூஜையும் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

முன்னதாக, நேற்று சசிகலா பசும்பொன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

12:07 PM (IST)  •  30 Oct 2021

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஜி.கே வாசன் மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் G.K.வாசன் அஞ்சலி செலுத்தினார், இதனை தொடர்ந்து பேட்டியளித்த அவர்,,, முல்லைப்பெரியாறு அணை லட்சக்கணக்கான மக்களின் உயிர் நாடியாகவும் வாழ்வாதாரமாகவும் உள்ளது முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு உரிமைகளை முறைப்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக கேரளா உறவை பலப்படுத்தும் வகையில் கேரளா அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

12:00 PM (IST)  •  30 Oct 2021

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி அறிவிப்பு இங்கே

"நான் பேசுவது. எழுதுவது. சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே. என் நேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல" என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர். திருமகனார் தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர்!

'மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாளத கொடுக்க வேண்டுமே தவிர சாதியால் அல்ல' என்று சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக

முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார் அளனவருக்குமான தலைவர் அவர்

பக்குவப்பட்ட ஒருவன். இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும் கிறித்துவ வராகத்தில் வைக்கிற மெழுகுவத்தி ஒளியையும் - முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டைப் போக்சு எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாகக் காண்பான்' என்று சொன்ன மதரல்லிணக்க மாமனிதர்!

தனியாக இருக்கும்போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள் கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்" என்று சொன்ன தத்துவஞானி!

'நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும் - அதேநேரத்தில் எறும்பு கடிக்கும் போது கோபம் வராமல் வருடிக் கொடுக்கும் பொறுமைக் குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும்" என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை!

"முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்” என்று முழங்கிய தமிழ் ஆளுமை

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் முன்மொழிந்த இந்த முத்து மொழிகளைப் பின்பற்றி நடப்பதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையாள அஞ்சலி!

11:56 AM (IST)  •  30 Oct 2021

மதிமுக சார்பில் வைகோ மரியாதை செலுத்தும் வீடியோ

11:54 AM (IST)  •  30 Oct 2021

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் தேவர் நினைவிடத்தில்   தேவரின் 114 வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், ராஜன் செல்லப்பா,செல்லூர் ராஜூ, காமராஜ்,பாஸ்கர், விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்..

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஏன் விழாவை புறக்கணித்தனர் என்று திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் விழாவை புறக்கணிக்கவில்லை. ஓபிஎஸ் மனைவியின் திதி நிகழ்வில் இருக்கிறார், இபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலை தான் வீடு திரும்பி உள்ளார். மேலும் இன்று சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார். என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

11:46 AM (IST)  •  30 Oct 2021

Thevar jayanthi OPS : தேனியில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget