TN Power Outage: பொதுமக்கள்- மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத்தேர்வு முடியும் வரை தமிழகத்தில் மின்தடை கிடையாது!
மாதந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகள், பொதுத்தேர்வு முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நாளை தொடங்கி நடைபெற்ற உள்ளதுவருகின்றன. இந்த இக்கட்டான தேர்வு காலத்தில் மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி படிப்பதற்கும், தேர்வுகளை எழுதுவதற்கும் ஏதுவாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகாலம் தொடங்கியுள்ள நிலையில் மின்தடை ரத்து குறித்த தகவல் அதிகாரிகளுக்கும் மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
முழு விவரம் என்ன?
பராமரிப்பு பணிகள் நிறுத்தம்: வழக்கமாக மாதந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகள், பொதுத்தேர்வு முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பகல் நேர மின்தடை தவிர்ப்பு: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வழக்கமாக மின்சாரம் நிறுத்தப்படும் நடைமுறை தற்போது அமலில் இருக்காது. இது சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்.
அவசர காலப் பணிகள்: மிக முக்கியமான பழுதுகள் அல்லது தவிர்க்க முடியாத அவசர கால மின் பராமரிப்பு தேவைப்பட்டால் மட்டுமே, உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் மிகக் குறைந்த நேரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மின்வாரியத்தின் அறிவுறுத்தல்கள்:
மின்வாரிய அதிகாரிகள் மற்றும் களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க ஏதுவாக மின் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கி வருவதால் மின் தேவை அதிகரித்தாலும், மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாதம் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























