![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Minister Senthil Balaji : இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் மீண்டும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
![Minister Senthil Balaji : இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி tamilnadu power supply back to normal condition minister senthil balaji Minister Senthil Balaji : இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/74c64bb12f1b41156ab818d4ae97a98d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மின் விநியோகம் மீண்டும் சீராகி உள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. மாண்புமிகு முதல்வர் தளபதி @mkstalin அவர்களின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 23, 2022
இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)