பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தில் பயணிக்க ரூபாய் 10 ஆயிரம் டிக்கெட் என்று வெளியான பயணச்சீட்டின் புகைப்படத்திற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட அரசுப்பேருந்தின் டிக்கெட் ஒன்றில் பவானி பைபாஸில் இருந்து துபாய்க்கு ரூபாய் 10000 டிக்கெட் என்று பயணச்சீட்டு ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.
பவானி டூ துபாய்க்கு பேருந்து:
இந்த சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், பவானி பைபாஸ் To துபாய் - ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் என பரவும் தவறான தகவல் !
ஈரோடு பவானி பைபாஸ் முதல் துபாய் வரை செல்ல அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பவானி பைபாஸ் To துபாய் - ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் என பரவும் தவறான தகவல் !
— TN Fact Check (@tn_factcheck) June 9, 2026
பரவும் செய்தி
ஈரோடு பவானி பைபாஸ் முதல் துபாய் வரை செல்ல அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை… pic.twitter.com/eFcGnQ2y26
உண்மை என்ன?
இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் (சேலம் கோட்டம்) அளித்துள்ள விளக்கத்தில், "சமூக வலைதளங்களில் பரவும் டிக்கெட் (எண்:27846) ஓசூர் புறநகர் கிளைக்கு உட்பட்ட ரூட் எண் 457F-ல் 06-06-2026 அன்று பவானி பைபாஸில் இருந்து கோயம்புத்தூர் வரை ரூ.100-க்கு வழங்கப்பட்டது.
பவானியிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் பயணச்சீட்டை போலியாகத் திருத்தி, அதிலிருந்த ‘பவானி – கோயம்புத்தூர்’ என்ற பயண விவரத்தை ‘பவானி – துபாய்’ எனவும், ரூ.100 கட்டணத்தை ரூ.10,000 எனவும் மாற்றியமைத்து தொழில்நுட்ப முறையில் போலியாக்கம் செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவானி பைபாஸ் நிறுத்தத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் பயணச்சீட்டை மாற்றியே இந்த மாற்றத்தை செய்துள்ளனர். ஏனென்றால், அந்த போலி பயணச்சீட்டில் உள்ள எண் 027846 பவானி பைபாஸ் - கோவை இடையேயான வழித்தட எண் ஆகும்.
ஏஐ மற்றும் எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலரும் எது உண்மை? எது போலி? என்று தெரியாத வகையில் பல்வேறு தகவல்களை மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், பல தருணங்களில் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத பதற்றம் உண்டாகிறது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















