மேலும் அறிய

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் பணி வழங்கினாரா ஸ்டாலின்?

ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி “ இன்னும் 10 ஆண்டுகளில் இவர்கள் எல்லாம் தாசில்தார் ஆகலாம், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பணி ஆணையை ஏற்றுக் கொண்டனர்” என கூறினார்.

கடந்த 2018 அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை எனக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை. அதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாகிச்சூட்டுக்கான காரணம் குறித்து விசாரிக்க அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரணை ஆணையம் அமைத்தார். 3 ஆண்டுகளாக அதன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டதோடு , வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை எனவும் அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோரை சந்தித்து அவர்களுக்கு அரசு வேலை வழங்கினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யச் சென்ற முதல்வர் ஸ்டாலின் , துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு இன்று பணியானை வழங்கினார். ஏற்கெனவே பணியாணை வழங்கியிருக்கும் போது மீண்டும் அவர்களுக்கு பணியாணை வழங்கியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர்கள் சொல்வது உண்மையா? ஸ்டாலின் மீண்டும் பணியாணை வழங்கினாரா? என ஆய்வு செய்தோம். துப்பாகிச் சூட்டால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 10 லட்சம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் காயம்பட்டோர் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் பணி வழங்கினாரா ஸ்டாலின்?

இந்நிலையில் வழங்கப்பட்ட பணி நியமனம் தகுதிக்கேற்றதாக இல்லை என்றும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வேலை கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அர்ஜூனன் பேசும்போது ”கல்வித்தகுதி கணக்கில் கொள்ளப்படாமல், ஏதோ ஒரு வேலை தர வேண்டும் என கொடுத்துள்ளார்கள்” என சொன்னார். ஆனால் அப்போதைய ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி “ இன்னும் 10 ஆண்டுகளில் இவர்கள் எல்லாம் தாசில்தார் ஆகலாம், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பணி ஆணையை ஏற்றுக் கொண்டனர்” என கூறினார். ஆனால் அந்த குற்றச்சாட்டு அப்படியே இருந்தது.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்திடம் கடந்த ஆண்டு மே மாதம் ஆஜரான பணி நியமன ஆணை பெற்றவர்கள், “எங்களின் தகுதிக்கேற்ப இந்த வேலைகள் இல்லை, உரிய வேலை தர வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். அதே போல் “ கடந்த பிப்ரவரி மாதமும் மாவட்ட ஆட்சியரை சந்தித்த மக்கள் மனு அளித்ததோடு உரிய வேலையை தர முதல்வராக இருந்த பழனிசாமியை வலியுறுத்தினர்.


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் பணி வழங்கினாரா ஸ்டாலின்?

பணி நியமன ஆணை பெற்றவர்கள்  தொடர்ந்து 2 ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் முதல்வர் முக ஸ்டாலினுக்கு சமர்பித்த தனது இடைக்கால அறிக்கையில் “துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட வேலைகள், அவர்கள் கல்வித்தகுதிக்கு ஏற்றதாக இல்லை என்றும் காலியாக உள்ள தகுதிக்கேற்ற இடங்களில் அவர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய பணி இடங்களை கண்டறிந்து பணி நியமனம் செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் காலியிடங்களை கண்டறிந்து, பணி நியமன ஆணைகள் தயாராகின. அதனையடுத்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் அவர்கள் அனைவரையும் அழைத்து, கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு பணி நியமன ஆணையை வழங்கினார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Breaking News LIVE : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான செய்திகளை, ஆசிகளை வழங்க வாட்சப் எண்ணை அறிவித்தார் சுனிதா கெஜ்ரிவால்
Breaking News LIVE : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான செய்திகளை, ஆசிகளை வழங்க வாட்சப் எண்ணை அறிவித்தார் சுனிதா கெஜ்ரிவால்
Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Breaking News LIVE : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான செய்திகளை, ஆசிகளை வழங்க வாட்சப் எண்ணை அறிவித்தார் சுனிதா கெஜ்ரிவால்
Breaking News LIVE : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான செய்திகளை, ஆசிகளை வழங்க வாட்சப் எண்ணை அறிவித்தார் சுனிதா கெஜ்ரிவால்
Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
Class 10th Exam: 10-ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 16,550 மாணவர்கள் ஆப்சென்ட்; 4 பேர் முறைகேடு- விவரம்
Class 10th Exam: 10-ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 16,550 மாணவர்கள் ஆப்சென்ட்; 4 பேர் முறைகேடு- விவரம்
Aadu Jeevitham Box Office : எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
Embed widget