TN Assembly Session LIVE: கிண்டி காந்தி மண்டபத்திற்கு இரவு 7.30 மணிவரை அனுமதி : அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..
LIVE

Background
திரையுலகினருக்கு ’கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’ - அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் அறிவிப்பு
தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ என்ற பெயரில் விருது வழங்கப்படும் என அமைசர் வெள்ளக்கோயில் சாமிநாதன் அறிவித்துள்ளார்
சட்டம் என்பது மின்சாரம் போல, தொட்டா ஷாக் அடிக்கும் : அமைச்சர் ரகுபதி பேச்சு
சட்டம் என்பது மின்சாரத்தை போன்றது, தொட்டால் ஷாக் அடிக்கதான் செய்யும்; சிலர் அதை தொட்டுவிட்டு ஷாக் அடிக்கிறது என்று வருந்தினால் நாங்கள் பொறுப்பல்ல - சட்டத்துறை விவாதத்தில் அமைச்சர் ரகுபதி பேச்சு
மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் சிலை : அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் அரங்கம், சிலை அமைக்கப்படும் - அமைச்சர் சாமிநாதன்
சினிமா படத் தலைப்புகள் குறித்த விவாதத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கிண்டல்!
திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த அமைச்சர் எ.வ.வேலு, ’’பொண்டாட்டி சொன்ன கேக்கனும்’’ என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார்; அப்போதே அவருக்கு இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது - சினிமா படத் தலைப்புகள் குறித்த விவாதத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கிண்டல்
கிண்டி காந்தி மண்டபத்திற்கு இரவு 7.30 மணிவரை அனுமதி : அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் கிண்டி காந்தி மண்டபத்திற்கு இரவு 7.30 மணிவரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேரவையில் அறிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

