மேலும் அறிய

Morning Breakfast Scheme : காலை உணவு திட்டத்தால் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து, கற்றல் திறனை அதிகரித்த தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம் மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ள உளவியல் மாற்றம், கற்கும் திறன் மேம்பாடு காரணமாக, அந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம் மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ள உளவியல் மாற்றம், கற்கும் திறன் மேம்பாடு காரணமாக, அந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த மதிய உணவு திட்டம், அடுத்தடுத்து வந்த முதலமைச்சர்களின் நடவடிக்கைகளால் சத்துணவு திட்டமாக உருவெடுத்துள்ளது. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மாணவர்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு:

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயரில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறிப்பிட்ட சில பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம், 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கான நிதியானது அரசுக்கு ஆகும் கூடுதல் செலவு இல்லை எனவும், மாணவர்கள் மீதான அரசின் முதலீடு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

உளவியல் மாற்றம்:

ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு கூலி தொழிலுக்கு செல்லும் சூழலை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாற்றியுள்ளது. பள்ளிக்கு சென்றால் தங்களது பிள்ளைகளுக்கு இரண்டு வேலை உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது. வெளியே சென்று இளம் வயதிலேயே கடும் வெயிலில் உழைப்பதை காட்டிலும், பள்ளிக்கு சென்றால் கல்வி பயில்வதுடன் சத்தான உணவும் கிடைக்கும் என பிள்ளைகளுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்வது தொடர்பான இந்த கூடுதல் நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்திய பெருமை, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தையே சேரும்.

கற்றல் திறன் அதிகரிப்பு:

பிள்ளைகளுக்கான உணவு பள்ளிகளிலேயே கிடைப்பதால், அவர்களை இளம் வயதிலேயே வேலைக்கு அனுப்பும் முயற்சியை பெற்றோர் கைவிட தொடங்கியுள்ளனர். இதனால், குழந்தை தொழிலாளர்கள் முறையும் குறைந்து வருகிறது. அதோடு, மாணவர்களின் இடைநிற்றலும் வெகுவாக குறைந்து, தினசரி பள்ளிக்கு வருவதால், பாடங்களை தவறாமல் கவனிக்கின்றனர். இதன் மூலம், இளம் தலைமுறையின் கற்றல் திறன் அதிகரிக்கிறது. இது எதிர்காலத்தில் தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:

அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சரின் முகவரி' திட்டத்தில் உள்ள சிஎம் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்பவர்கள், பெரும்பாலும் தங்களது தேவைகளை, கோரிக்கைகளை, புகார்களை பதிவு செய்வதற்காகத்தான் பேசுவார்கள். ஆனால், சில வாரங்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த தீபாராணி என்பவர்  தொடர்பு கொண்டபோது, 'உங்களுடைய புகார் என்னம்மா?' என்று கேட்டதும், 'புகார் சொல்வதற்காக நான் போன் செய்யவில்லை, முதலமைச்சரின் தொலைபேசி எண் என்னிடம் இல்லை. அவருக்கு நன்றி சொல்வதற்காக போன் செய்தேன்' என்று கூறினார். மேலும், நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன். அதனால் என் பிள்ளைக்கு காலையில சாப்பாடு கொடுக்க முடியாது. என் மகன் ஐந்தாவது படிக்கிறான். இப்போது, காலை உணவுத் திட்டத்தின் மூலமாக அவனுக்கு தினமும் காலை உணவு கிடைத்து விடுகிறது, அது தரமானதாக இருக்கிறது. அதனால முதலமைச்சருக்கு நன்றி சொல்லணும்" என்று அந்தத் தாய் நெகிழ்ச்சியோடு கூறியதுதான் எனக்குக் கிடைத்த பாராட்டு என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி:

தொடர்ந்து, “காலைச் சிற்றுண்டி சாப்பிடும் குழந்தைகள் மற்றும் கட்டணமில்லாப் பேருந்து பயணம் செய்யும் மகளிரின் முகங்களில் நித்தமும் காலையில் உதயசூரியன் உதிக்கிறது அல்லவா இதுதான் இந்த ஆட்சியினுடைய மாபெரும் சாதனை. பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, கல்லூரியில் படிக்கும் இளையோர்களை மட்டுமின்றி,  படிக்க வராமல் இடையில் நின்று விடக்கூடியவர்களையும் பள்ளி, கல்லூரிகளுக்குள் அழைத்து வருகிறோம். 2023 – 2024 ஆம் நிதியாண்டில் இருந்து காலை உணவு திட்டம் தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்”, என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
Theni power cut: தேனியில் நாளை (10-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தேனியில் நாளை (10-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Embed widget