மேலும் அறிய

Tamil Nadu Coronavirus : தமிழகத்தில் விரைவில் 2 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமனம் - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் விரைவில் 2 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கத்தினால் தினசரி 280க்கும் அதிகமான நபர்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். மேலும், தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதியதாக பொறுப்பேற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும், உயரதிகாரிகளுடனும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும் மாநிலம் முழுவதும் நேற்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதன்படி, நேற்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டார்.


Tamil Nadu Coronavirus : தமிழகத்தில் விரைவில் 2 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமனம் - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

இன்று கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அதிகாரிகளுடன் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறைந்த அளவு ஆக்சிஜனைப் பயன்படுத்தி சிறப்பான சிகிச்சை அளித்து நோயாளிகளை குணப்படுத்தி வருகின்றன. ஆம்புலன்சுகளில் நோயாளிகள் காத்திருப்பதை தவிர்க்க, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பும் வகையில், 15 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர், 2 ஆயிரம் மருத்துவர், 6 ஆயிரம் செவிலியர்கள், 2 ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்கள் என 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்களை கூடுதலாக பணி நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, கோவை இ.எஸ்.ஐ. மற்றும் அரசு மருத்துவமனைக்கு தேவையான எண்ணிக்கயைில் பிரித்து அனுப்பப்படுவார்கள்.

மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது, அந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை முழுமையாக கிடைக்கத் தொடங்கியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதையும் தொடர்ந்து கண்காணிப்போம். கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும்.“

இவ்வாறு அவர் கூறினார்.


Tamil Nadu Coronavirus : தமிழகத்தில் விரைவில் 2 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமனம் - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்து வருவதால், மருத்துவர்கள், செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் பணியாற்றுவதற்காக தேர்வு எழுதாமல் காத்திருக்கும் மாணவர்கள் ஆகியோரை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்கனவே அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியிருந்தார். இந்த சூழலில், தமிழகத்தில் விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் அதிக அளவில் நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை இருந்ததும் பரவலாக பேசப்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget