மேலும் அறிய

தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!

தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு கொடுத்த உரையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் ஆளுநர் அர்லேகர் வாசித்து வருகிறார்.

தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று (ஜூன் 18) காலை சரியாக 10 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து முதல்வர் விஜய் பேரவைக்கு வந்தார். முதல்வர் மற்றும் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையுடன் பேரவை தொடங்குவது மரபு. அந்த வழக்கப்படியே, ஆளுநர் அர்லேகர் உரையுடன் பேரவை தொடங்கி உள்ளது.

எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல்..

தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு கொடுத்த உரையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் ஆளுநர் அர்லேகர் வாசித்து வருகிறார். பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டவர்களின் மேற்கோள்களையும் கோடிட்டுக் காட்டினார். 

ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடந்து முடிந்த பிறகு, தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சமூகநீதி சர்வே என்ற பெயரில் இது நடைபெறும். எனினும் தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும். 2031-ல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாறும். 

மேகதாது அணையை கட்டவிடமாட்டோம்

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்காத கர்நாடக அரசு, உபரிநீரை மட்டுமே விடுவிக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையிலான மேகதாது திட்டத்தை தடுக்கவும், உரிய நேரத்தில் தண்ணீரை பெறவும் அனைத்து வகையான சட்ட நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

போர்க்கால அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பல்

போர்க்கால அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை உயர் கல்வித்துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இரு மொழிக் கொள்கையே தொடரும். மத்திய அரசு உடனடியாக மாநில அரசுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை ஆளுநர் தெரிவித்துள்ளார். 

கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு அரசு உரையை வாசித்த அப்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி, குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாம்: "10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழக சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர். அப்போது, தங்களின் சட்டைகளில் "வாயை திறங்க CM" என்ற வாசகங்கள் அடங்கிய பேட்ஜ்களை குத்தியிருந்தனர்.

அதேபோல, கைகளில் பல்வேறு கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பதாகைகளில், "தூய சக்தி அல்ல துயர சக்தி", "கதறல் கேட்குதா CM?", "திரையில் நாயகன், தரையில் வில்லன்", "REELS இங்கே REALS எங்கே?", "மாற்றம் அல்ல இது ஏமாற்றம்" மற்றும் "வாயில் ஏதாவது வருமா CM?" போன்ற முழக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget