Sterlite | ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!
சீல் வைக்கப்பட்ட வெள்ளை கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
![Sterlite | ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்! Sterlite violence report submitted at high court Sterlite | ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/27/f70a2ebc0b17b58bc4ea79ed54125e24_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட வெள்ளை கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தேசிய மனித உரிமை ஆணையம் பதில் அளிக்க நீதிமன்றம் மூன்று வாரம் அவகாசம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஸ்டெர்லைட் ஆலை தொடங்கு இயங்குவதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பக்கம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட தேவையற்ற வழக்குகளை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு அண்மையில் பரிந்துரைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வன்முறையில் மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறச் சொல்லி உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன்படி பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும். நீதிபதி அருணா ஜெகதீசனின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசின் செய்தி வெளியீட்டில்,
’தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணாஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் அவர்களின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பின்வரும் முக்கிய முடிவுகளை அறிவித்திருந்தார்.
1. இந்த சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.
3. காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மனஉளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும். என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் 1,929 பேர் புதிதாக பாதிப்பு.. 23 பேர் உயிரிழப்பு
4. ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இப்போராட்டத்தின்போது தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)