மேலும் அறிய

டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது, மக்களும் கவனமாக இருக்கவேண்டும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

உள்ளாட்சித்துறையினருக்கும், சுகாதாரத்துறையினருக்கு டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து அவரும் பங்கேற்றார். அதிகாலை 4.30 மணிக்கு தனது மாரத்தான் ஓட்டத்தை தொடங்கிய அமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் தனது ஓட்டத்தை நிறைவு செய்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு 10 நாட்கள் கழித்து, உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு என்ற அடிப்படையில் தினந்தோறும் 10 கிலோமீட்டர் தொலைவு நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். எங்கே இருந்தாலும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை தொடர்ச்சியாக வைத்துள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுப்பணியை கூடுதலாக கவனிக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால், 20 நாட்களாக எந்த பயிற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தேன். தற்போது கடந்த 10 நாட்களாக மீண்டும் பயிற்சியை மேற்கொண்டுள்ளேன்.


டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது, மக்களும் கவனமாக இருக்கவேண்டும்  - அமைச்சர் மா.சுப்ரமணியன்

எங்கே சென்றாலும் அதிகாலையில் எழுந்து 10 கிலோ மீட்டர் ஓடுவேன். அந்த பயிற்சியில் இருந்ததால் இந்த மாரத்தான் சாத்தியமானது. கடந்த தி.மு.க. ஆட்சிகளில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிறைய மாரத்தான் போட்டிகளை அப்போதைய விளையாட்டுத்துறை சார்பில் தமிழக அரசே முன்னின்று நடத்தியது. அதற்கு அடுத்து வந்த ஆட்சியாளர்கள் இதை தொடர தவறிவிட்டனர்.

குறிப்பாக சென்னையில் மாரத்தான் போட்டிகளை நடத்துவதற்கு ஏராளமான இடையூறுகள் இருந்தது.  இளைஞர்கள் மேல் அக்கறை கொண்ட அரசு ஆட்சிக்கு வந்துள்ளதால், எதிர்காலத்தில் இதுபோன்ற விளையாட்டுக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். டெங்கு பாதிப்பு 2 ஆயிரம் என்பது ஒரே மாதத்தில் ஏற்படவில்லை. கடந்த ஆறேழு மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாதத்திற்கு 40, 50 என்று பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது, மக்களும் கவனமாக இருக்கவேண்டும்  - அமைச்சர் மா.சுப்ரமணியன்

உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சுகாதாரத்துறையினருக்கும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேவையில்லாமல் உள்ள கழிவுநீரை அகற்றும் பணிகளை மேற்கொள்ளச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம். முதல்வரின் உத்தரவின்படி, கொசுமருந்து தெளிப்பது, கொசுமருந்து புகை அடிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில் உள்ள நீர் நிலைகளில் ட்ரோன் மூலமாக மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்து வரும் சூழலில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றுதான் 3 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருவது சுகாதாரத்துறையினருக்கு சவாலான பணியாக அமைந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget