மேலும் அறிய

"ஓபிசி உரிமையில் கை வைக்காதே" - ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ஸ்டாலினின் மாஸ் அட்டாக்

குளறுபடிகள் இன்றி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் ஓபிசி மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தற்போது எடுக்கப்பட்டு வரும் #Census2027 கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட ‘open-ended format to record caste details without a pre-determined drop-down list or standardized menu’ முறையை ஒன்றிய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்று ஒன்றிய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல!

மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.

 

இதனால் இந்தியாவில் 46 இலட்சம் சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, OBC மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர்களது கல்வி, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான். அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும். அப்படி இருக்கையில், ஒன்றிய, மாநில அரசுகளின் OBC சாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் சாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.

தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயும், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது.

பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Nirmalkumar: நேரு மீது பொய் வழக்கு போட்டோமா? கூட்டணி நிலவரம் - திமுகவிற்கு பதிலடி தந்த நிர்மல்குமார்
நேரு மீது பொய் வழக்கு போட்டோமா? கூட்டணி நிலவரம் - திமுகவிற்கு பதிலடி தந்த நிர்மல்குமார்
தவெகவில் இணைந்த குற்றவாளி வெட்டிக்கொலை.! இது தான் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை - விளாசிய உதயநிதி
தவெகவில் இணைந்த குற்றவாளி வெட்டிக்கொலை.! இது தான் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை - விளாசிய உதயநிதி
School Exam Holidays : மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
Thirumavalavan : பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவில் இணைந்த குற்றவாளி வெட்டிக்கொலை.! இது தான் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை - விளாசிய உதயநிதி
தவெகவில் இணைந்த குற்றவாளி வெட்டிக்கொலை.! இது தான் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை - விளாசிய உதயநிதி
Nirmalkumar: நேரு மீது பொய் வழக்கு போட்டோமா? கூட்டணி நிலவரம் - திமுகவிற்கு பதிலடி தந்த நிர்மல்குமார்
நேரு மீது பொய் வழக்கு போட்டோமா? கூட்டணி நிலவரம் - திமுகவிற்கு பதிலடி தந்த நிர்மல்குமார்
Thirumavalavan : பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
Chennai New Airport : பரந்தூர் அவுட்… அடுத்த ஏர்போர்ட் எங்கே.? 2 இடங்களை டிக் செய்த சிஎம் விஜய்- எங்கெங்கே தெரியுமா.?
பரந்தூர் அவுட்… அடுத்த ஏர்போர்ட் எங்கே.? 2 இடங்களை டிக் செய்த சிஎம் விஜய்- எங்கெங்கே தெரியுமா.?
Chennai Airport: புறக்கணிக்கப்படும் திருவள்ளூர்..! புதிய ஏர்போர்ட்டால் ஜாக்பாட் அடிக்குமா? கும்மிடிப்பூண்டிக்கு வருமா?
புறக்கணிக்கப்படும் திருவள்ளூர்..! புதிய ஏர்போர்ட்டால் ஜாக்பாட் அடிக்குமா? கும்மிடிப்பூண்டிக்கு வருமா?
Kia Hybrid Cars: மைலேஜை ஏத்தி, செலவை குறைக்கிறோம்..! டக்கரா 5 ஹைப்ரிட்கள் - கியாவின் பட்ஜெட் டூ 7 சீட்டர் வரை
மைலேஜை ஏத்தி, செலவை குறைக்கிறோம்..! டக்கரா 5 ஹைப்ரிட்கள் - கியாவின் பட்ஜெட் டூ 7 சீட்டர் வரை
Nirmal Kumar: ”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
Diwali Train Reservation : தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.! ரயிலில் முன்பதிவு இன்று ஓபன்- ஈசியா டிக்கெட் எடுப்பது எப்படி.?
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.! ரயிலில் முன்பதிவு இன்று ஓபன்- ஈசியா டிக்கெட் எடுப்பது எப்படி.?
Embed widget