மேலும் அறிய

இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படைக்கு பயன்படுத்தும் இலங்கை அரசின் முடிவால் தமிழ்நாட்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. என எந்த அரசு அமைந்தாலும், தமிழ்நாட்டில் எந்த கட்சியின் ஆட்சி அமைந்தாலும் தீர்க்கப்படாமலே உள்ள பிரச்சினைகளில் தமிழக மீனவர்களின் பிரச்சினை மிக மிக முக்கியமானதாகும்.

தீராத தமிழக மீனவர்கள் சோகம்:

கச்சத்தீவு இந்தியாவில் இருந்து இலங்கையின் வசம் சென்றடைந்த பிறகு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2000ம் ஆண்டுக்கு பிறகு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் மிக மோசமானது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், இந்த அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் பல முறை தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் உயிரை பறிப்பதுடன் அல்லாமல் தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளையும் இலங்கை கடற்படையினர் அவ்வப்போது சேதப்படுத்தி வருகின்றனர்.

இலங்கை அரசின் அதிர்ச்சி முடிவு:

தமிழக மீனவர்கள் பலரின் நூறறுக்கணக்கான படகுகளும், வலைகளும் இலங்கை கடற்படையின் வசம் உள்ளது. அதை மீட்டுத்தர வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு தொடர்ந்து பல முறை வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், அவர்களது கோரிக்கையை எந்த அரசும் இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. சமீபத்தில் பொறுப்பேற்ற புதிய இலங்கை அதிபர் திசநாயகே இலங்கை எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்களுக்கு ( தமிழக மீனவர்கள்) எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மன்னார், மயிலிட்டி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை முதற்கட்டமாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பறிமுதல் செய்து கொண்டதுடன், மீனவர்களையும் கைது செய்து அவர்களது படகுகளையும் தற்போது இலங்கை கடற்படைக்காக பயன்படுத்தும் முடிவால் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு தீர்வு காணுமா?

இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசும், மத்திய அரசும் விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் அவ்வப்போது விடுவிக்கப்பட்டு வந்தாலும் இலங்கை அரசிடம் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளும், சிறையில் உள்ள மீனவர்களும் இதுவரை முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை. கடந்த வாரம் பாம்பன் பாலத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை விடுவிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Embed widget