மேலும் அறிய

தந்தை இறுதி சடங்கு… ஹெலிகாப்டரில் வந்த மகன்… புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!

சாலை மார்க்கமாக வர தாமதம் ஆகும் என்பதால், 5 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ஹெலிகாப்டர் ஒன்று வாடகைக்கு எடுத்துள்ளார். தனியார் ஹெலிகாப்டர் வாயிலாக, நேற்று மாலை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் வந்தார்.

தந்தையின் இறுதி சடங்கிற்கு எப்படியாவது சென்று சேர வேண்டும் என்பதற்காக ஓடோடி வந்த மகனின் பாசத்தை ஊர்மக்கள் அனைவரும் கண்டு நெகிழ்ந்து போன சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. நெகிழும்படியாக என்ன நிகழ்ந்தது என்றால், இந்தோனேசியாவில் இருந்து விமானத்தில் பெங்களூரு வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து வந்து நேரத்திற்கு சேர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கே.ஆர்.சுப்பையா. இவரது ஒரே மகன் சசிகுமார். இவர் திருப்பூரில் ரெடிமேடு ஆடைகள் கம்பெனி நடத்தி வருகிறார். இதைத்தவிர இவருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தோனேசியாவில் நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சசிகுமார் தொழில் விஷயமாக இந்தோனேசியா சென்றிருந்தார். அப்போது சசிகுமாருக்கு, அவரது தந்தை உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது.

தந்தை இறுதி சடங்கு… ஹெலிகாப்டரில் வந்த மகன்… புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!

தந்தை இறந்த செய்தி கேட்டு உருகிய மகன் சசிகுமார் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக உடனடியாக இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து பெங்களூரு வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக வர தாமதம் ஆகும் என்பதால், 5 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ஹெலிகாப்டர் ஒன்று வாடகைக்கு எடுத்துள்ளார். தனியார் ஹெலிகாப்டர் வாயிலாக, நேற்று மாலை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் வந்தார். முன்னதாக, புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் ஹெலிகாப்டா் தரையிறங்க அனுமதி பெறப்பட்டிருந்தது. பின்னா், அங்கிருந்து காரில், சொந்த ஊரான தென்னங்குடிக்கு சென்றார். தந்தையின் இருதிச்சடங்கில் கலந்து கொள்ள எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று எப்படியோ வந்து சேர்ந்த சசிகுமாரை கண்டு அங்கிருந்த மக்கள் நெகிழ்ந்தனர்.

தந்தை இறுதி சடங்கு… ஹெலிகாப்டரில் வந்த மகன்… புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!

பெங்களூரில் இருந்து புதுக்கோட்டை வந்த தனியார் ஹெலிகாப்டர் உடனடியாக திருப்பி அனுப்புவதாக தான் முதலில் திட்டம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேனியில் இருந்து 'ஒயிட் பெட்ரோல்' கொண்டு வந்து நிரப்ப காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக ஒயிட் பெட்ரோல் வந்ததும் ஹெலிகாப்டர் புறப்பட தயாரான நிலையில், வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் காரணத்தால் வானம் திடீரென மேக மூட்டம் கொண்டது. அந்த வானிலையில் ஹெலிகாப்டர் இயக்க முடியாது என்று பைலட் கூறியுள்ளார். இதனால், ஹெலிகாப்டர் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பைலட்டும், அவரது உதவியாளரும் புதுக்கோட்டை ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக தடைபட்ட ஹெலிகாப்டர் திரும்பி செல்லும் பயணம் இன்று புறப்பட திட்டமிட பட்டுள்ளது. எனவே நேற்று முதல் ஹெலிகாப்டர் ஆயுதப்படை திடலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. நிறுத்தப்பட்டிருக்கும் ஹெலிகாப்டரை பொதுமக்கள் பலரும் ஆா்வமுடன் வந்து பாா்த்துச் செல்கின்றனர். ஹெலிகாப்டரின் பாதுகாப்புக்காக போலீஸாரும் பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா். ஹெலிகாப்டரைச் சுற்றிலும் தடுப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget